வீட்டு சமையல் எரிவாயு மற்றும் வணிக சமையல் எரிவாயு கொள்கலன்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை வினைத்திறனாக முன்னெடுப்பதற்காக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்காலத்தில் நாளாந்தம் சுமார் 90,000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க உள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மூன்று தினங்களில், சந்தைக்கு 220,000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் நேற்று(06) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இன்னும் குறுகிய காலத்துக்குள், சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Post Views: 151