சமூக செயற்பாட்டாளர் முரளிதரனை விசாரணைக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

சமூக செயற்பாட்டாளரும், தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளிதரனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, முரளிதரனை எதிர்வரும் (20) ஆம் திகதி காலை 9:00 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு பிரிவு தொலைபேசியூடாக அவருக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளது.

இவர் காணி உரிமை, கடற்றொழிலாளர்களின் உரிமை, உட்பட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்