2026ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை!

2026ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLS) சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலிமர் அடிப்படையிலான பாலூட்டும் போத்தல்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை, குறித்த சான்றிதழை கட்டாயமாக்கியுள்ளது.

அக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அந்த வகையில், தேவையான SLS தரங்களுக்கு இணங்காமல், உத்தியோகபூர்வ சான்றிதழ் அடையாளத்தைக் காட்டாமல், உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அத்தகைய போத்தல்களை உற்பத்தி, இறக்குமதி, சேமித்து அல்லது விற்பனை செய்பவர்கள் இந்த சட்டத்திற்கு உட்பட்டவர்கள் ஆவர்.

இந்த உத்தரவு இரண்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியது. அதாவது, குடிநீர் திரவங்களை எடுத்துச் செல்வதற்கான மறுபயன்பாட்டு பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலிமர் பொருட்களால் செய்யப்பட்ட குழந்தை பால் போத்தல்களுக்கு தனி விவரக்குறிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்துதல், குறைந்த தரம் வாய்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் சந்தையில் நுழைவதைத் தடுப்பது மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்