உள்நாட்டு எரிவாயுவிற்கான செலவு அடிப்படையிலான விலைச் சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை இணக்கம் வெளியிட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி விலை சூத்திரம் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
உள்நாட்டு எரிவாயு தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 90





