தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது உறுதி!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்பீட கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது” இதுவரை காலமும் கொள்கை ரீதியாக பொது வேட்பாளர் ஒருவரை தமிழர் தரப்பில் நிறுத்துவது என்று இருந்த விடயம் இன்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொது […]

தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் யாழில் முன்னெடுப்பு!

தந்தை செல்வா நினைவு அறக்காவற் குழுவின் ஏற்பாட்டில் தந்தைசெல்வாவின் 47ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(26) யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது. இதேவேளை தந்தைசெல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் அன்னாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினர். இவ் நிகழ்வில் நினைவுப் பேருரையினை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பணிமனை பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புகளும், சவால்களும் என்னும் கருப்பொருளில் உரையாற்றினர். […]