நிறுவனம் மிகக் குறுகிய காலத்திலேயே பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்தும் வருகிறது. அந்த வகையில் இப்போது இந்நிறுவனத்தின் கைவசம் 3 மெகா பட்ஜெட் படங்கள் இருக்கிறது.
முதலாவதாக மோகன் ராஜ் இயக்கத்தில் ரவி மோகன் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கின்றனர்.
அடுத்ததாக சிம்புவின் 51 ஆவது படம் தான். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். ஓ மை கடவுளே, டிராகன் போன்ற படங்களை இயக்கியவர் தான் அஸ்வத். இப்போது சிம்பு வெற்றிமாறன் படபிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதால் அடுத்ததாக இந்த படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவதாக பிரதீப்புடன் ஏஜிஎஸ் நிறுவனம் மீண்டும் கூட்டணி போட இருக்கிறது. அதாவது இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய வசூலை கொடுத்தது பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படம் தான். இதன் பிறகு பிரதீப்பை வைத்து டிராகன் படத்தை எடுத்திருந்தனர்.
இப்படமும் அமோக வெற்றி கொடுத்த நிலையில் மூன்றாவது முறையாக பிரதீப் படத்தை தயாரிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தையும் பிரதீப் இயக்க இருக்கிறார். அதற்கான கதையை இப்போது எழுதி வருகிறாராம். இது தவிர லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் டியூட் ஆகிய படங்களில் பிரதீப் நடித்துள்ளார்.
இந்த படங்கள் இந்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்துடன் பிரதீப் இணைவதால் ஹட்ரிக் வெற்றி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.