மகிந்த கால அமைச்சர்களுக்கு அநுரா ஆட்சி தண்டனை..

ஆகெரம்போர்ட் கொடுக்கல் வாங்கல் முறைகேட்டில் குற்றவாளிகளாக ஆஅடையாளங்காணப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த ஆஅளுத்கமகேவுக்கு 20 வருட கடூழிஅய சிறைத்தண்டனையும்,

முன்னாள் வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோவுக்கு 25 வருட கடூழியசிறைத்தண்டனையும் வழங்கி கொழும்பு மவரடங்கிய மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது .

அரசாங்கத்திற்கு ரூ.53 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் குற்றவாளி எனக் கண்டறிந்த பின்னர் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே
அரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றவாளி எனக் கண்டறிந்த பின்னர் அவருக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது

அதற்கமைய, குறித்த வழக்கு இன்று மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதே மகிந்தானந்த அளுத்கமேதான் கடந்த 2012, ல் எனக்கு 50, கோடி தருவதாகவும் அமைச்சர் பதவி தருவதாகவும் அரசுடன் இணையுமாறு பாராளுமன்றத்தில் என்னுடன் கதைத்தார்.

இந்த உண்மையை மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் ஒரு நிகழ்வில் உரையாற்றும்போது கூறியிருந்தேன்.

எனது உரை சக்தி தொலைக்காட்சியில் செய்தியில் காண்பிக்கப்பட்டது.
அப்படி நான் கூறியதற்காக எனக்கு எதிராக நூறுகோடி மான நஷ்ட வழக்கை கொழும்பில் தொடரப்பட்டது.
சட்டத்தரணி கே வி தவராசா எனக்காக ஆயராகினார் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உரையாற்றிய விடயத்தை மட்டக்களப்பு நீதிமன்றில்தான் வழக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும் கொழும்பில் வழக்கு தாக்கல் செய்தது முரணானது என கூறப்பட்டது.

முடிந்தால் மட்டக்களப்பு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யுமாறு அமைச்சர் மகிந்தானந்தவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது அவர் மட்டக்களப்பில் வழக்கு தாக்கல் செய்யாமையால் அது தள்ளுபடியானது.

உண்மையை கூறிவிட்டு அது இல்லை எனக்கு எதிராக அன்று மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்தவர் இன்று இப்படியான தீர்ப்பு..

மறக்க முடியாதவைகள் இது..
-பா.அரியநேத்திரன்-

சிறப்புச் செய்திகள்