வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி கோரும் மஹிந்தானந்த!

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு கோரியுள்ளார்.

விவசாய அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் உர இறக்குமதியில் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தி மஹிந்தானந்த அலுத்கமகே மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில் மஹிந்தானந்த கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்ள அனுமதிக்கமாறு மஹிந்தானந்த எழுத்து மூல கோரிக்கை முன்வைத்துள்ளார்.

மஹிந்தானந்த தற்பொழுது கொழும்பு சிறைச்சாலையின் எம் வார்ட்டில் மேலும் பத்து கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் இதே சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்