நாட்டில் நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளும் நாளை (03) மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒக்டோபர் 3ஆம் திகதி உலக மதுவிலக்கு தினமாகும்.

இதனையொட்டியே சகல மதுபான சாலைகளும் நாளை (03) மூடப்படவுள்ளது.

அதோடு சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்வோரை கைது செய்ய விசேட சுற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்