சர்வதேச அமைப்பினால் உத்தரவாதம் வழங்கப்பட்டால் மாத்திரம் மனித புதைகுழி அகழ்விற்கான நிதியினை புலம்பெயர் தமிழர்கள் வழங்க வேண்டும் என வேலன் சுவாமிகள் (Velan Swamigal) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று(24) நடைபெற்ற அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இலங்கையிலே தமிழர்கள் தொடர்பில் நடைபெறுகின்ற போராட்டங்கள் குறித்து புலம்பெயர்ந்தவர்களும் அவர்களது நாட்டிலே போராட்டங்கள் நடாத்தி ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post Views: 117