பதவிநீக்கம் செய்யப்பட்ட கூட்டாளி தெரிவுசெய்யப்பட்டுள்ளார், நியூயோர்க் டைம்ஸ்

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் மாற்றத்தி;ற்கான குரல்கள் ஒலிக்கின்ற போதிலும் முன்னாள் ஜனாதிபதியுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ள ரணில்விக்கிரமசிங்கவை முன்னாள் ஜனாதிபதிக்கு பதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்துள்ளனர்

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்களால் கடந்த வாரம் ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்ட கோத்தபாய ராஜபக்சவிற்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர்களால் புதன் கிழமை ஜனாதிபதியாக ரணில்விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

எனது வாழ்க்கைiயே இந்த நாடாளுமன்றம்தான்,இந்த கௌரவத்தை நாடாளுமன்றம் எனக்கு வழங்கியமை குறித்து நான் மிகவும் நன்றியுடையவனாக உள்ளேன் என வாக்களிப்பு முடிவுகள் வெளியான பின்னர் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடு மிக மோசமான நிலையிலுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இயற்கை எழில் கொஞ்சும் காலிமுகத்திடல் பகுதியில்- ஆர்ப்பாட்டக்காரர்கள் 100 நாட்களாக முகாமிட்டுள்ள அந்த பகுதியில் ஜனாதிபதி செயலகத்தின் பாரிய திரையின் மூலம் நாடாளுமன்றத்தில் வாக்குகள் எண்ணப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தார்கள், ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டதும் அவர்களின் மனோநிலை உடனடியாக உற்சாகமிழந்தது.

ரணில் ஒரு கள்ளன் எங்களால் அவனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான சக்சிலா சில்வா.

ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என அவர் தெரிவித்தார்.

219 வாக்குகளில் 134 வாக்குகளை பெற்றுவெற்றிபெற்றுள்ள விக்கிரமசி;ங்க நெருக்கடியில் உள்ள நாட்டை பொறுப்பேற்பார்.

ஒருகாலத்தில் திடமான நடுத்தரவர்க்கத்தை கொண்ட துடிப்பான பொருளாதார நாடாக காணப்பட்ட 22 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட இலங்கை இன்று அழிந்துவிட்டது.

அரசாங்கத்தின் தவறான முகாமைத்துவம் மோசமான கொள்கைமுடிவுகள் ஆகியவற்றுடன் பெருந்தொற்று காரணமாக முக்கியமான சுற்றுலாதுறை வருமானம் வீழ்ச்சி அதிகரிக்கும் சர்வதேச விலைகள் ஆகியன நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளன.

மக்கள் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக நாட்களை செலவிடுகின்றனர்,அதேவேளை கடைகளில் முக்கிய உணவும் மருந்துகளும் அற்றுப்போயுள்ளன.

நிலைமை கடந்த சில மாதங்களாக மேலும் மோசமாக போயுள்ளதால் இரண்டு தசாப்தகாலமாக இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்சாக்களை பதவி விலகுமாறு இலங்கையர்கள் வேண்டுகோள் விடுத்தனர் , ஜூலை9 ம் திகதி ஆர்ப்பாட்டங்களின் கொதிநிலை தீவிரமடைந்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றினர், ஜனாதிபதியும் அவரது பாரியாரும் மாலைதீவிற்கும் பின்னர் சிங்கப்பூரிற்கும் தப்பிச்சென்றனர் பின்னர் ஜனாதிபதி அங்கிருந்து இராஜினாமாவை அறிவித்தார், பிரதமராக பதவி வகித்தரணில்விக்கிரமசிங்க ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.

ராஜபக்ச அரசியல் வம்சாவளியின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படுவதால் மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் வெகுஜன எதிர்ப்பு இயக்கத்திலிருந்து அவருக்கு சிறிய ஆதரவும் கிடைக்கவில்லை.

பதில் ஜனாதிபதியாக தனது முதலாவது நாளில் ரணில் விக்கிரமசிங்க அவசரகாலநிலையை அறிவித்தார், பெருமளவிற்கு அமைதியான இயக்கத்தில் பாசிச சக்திகள் காணப்படுவதாக எச்சரித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது விக்கிரமசிங்கவின் வீடு தீமூட்டப்பட்டது ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரின் வீட்டை ஆக்கிரமித்தனர்,ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு பயன்படுத்தும் அந்த கூடாரத்தில் காணப்பட்ட கோட்டா கோ கோம் அறிவிப்புகள் விரைவில் ரணில் கோவாக மாறின அவரின் கொடும்பாவியும் எரியூட்டப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை வாக்களித்தவேளை இலங்கையின்நாடாளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டிருந்தது-இராணுவ வாகனங்களும் கடற்படை கலங்களும் காணப்பட்டன.

ரணில்விக்கிரமசிங்க ராஜபக்சக்களை காப்பாற்றுவதற்கான ஏமாற்று அரசியல் வர்க்கத்தினரின் பிரதிநிதி என ஆர்ப்பாட்டக்காரர்கள் கருதுவதால் அவர்கள் ரணில்விக்கிரமசி;ங்கவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என கொழும்மை தளமாக கொண்ட மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்றுபணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறிய பின்னர் முதல்தடவையாக ராஜபக்ச குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள் பொதுவெளியில் இன்று காணப்பட்டனர்,நாடாளுமன்றத்தில் அவர்கள் காணப்பட்டனர்,
ஒரே ஒரு கதிரைதான் – ரணில் நடத்திய அரசியல் புரட்சி

எங்கள் youtubeக்கு SUBSCRIBE பண்ணி ஆதரவு தாருங்கள்

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்