இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் வகையில் இந்தியா உண்மையில் விரைவாக நடவடிக்கை எடுத்தது
எனினும் சீனா, இலங்கைக்கான நிவாரணங்கள் தொடர்பில் உரிய பதில்களை வழங்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
யுஎஸ்எய்ட் என்ற சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இன்று கருத்துரைத்த சமந்தா பவர், இலங்கைக்கு வெளிப்படையற்ற ஒளிபுகா(opaque loan) கடன்களை வழங்கியுள்ள சீனா, இலங்கைக்கு அதிக கடன்களை வழங்குனராக மாறியுள்ளது. எனினும் அது இலங்கைக்கு உதவும் வகையில் தாம் வழங்கிய கடன்களை மறுசீரமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீனா நிதியளித்தபோதும் அந்த துறைமுகத்தில் இருந்து வருமானம் பெறப்படவில்லை. இறுதியில் அது சீனாவுக்கே நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பீய்ஜிங் இலங்கைக்கு கடன் வழங்குவதாக உறுதியளித்ததாகவும் ஆனால் அது குறிப்பிடத்தக்க அளவில் நிவாரணத்தை வழங்கவில்லை என்றும் சமந்தா பவர் கூறியுள்ளார்
முன்னதாக சீனாவிடம் இருந்து பெற்ற கடன்களை மறுசீரமைப்பது தொடர்பிலான பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு சர்வதேச நாணய நிதியம், இன்று இலங்கை அரசாங்கத்திடம் கோரியிருந்த நிலையிலேயே அமெரிக்க அதிகாரியின் கருத்தும் வெளியாகியுள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com