இத்தாலியில் வசிக்கும் தம்பதி பெயரில் யாழில் விவாகரத்து!

வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியினரின் பெயரில் யாழ்ப்பாணத்தில் விவாகரத்து பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சட்டத்தரணியின் அலுவலகத்தில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் திருமணமாகி இத்தாலியில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இடையில், சில வருடங்களுக்கு முன்னர் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு இருவரும் இத்தாலியில் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் கணவன், சாவகச்சேரியில் வசிக்கும் தனது சகோதரியிடம், தமக்கு யாழ்ப்பா ணத்தில் திருமணம் நடைபெற்றமையால் யாழ்ப்பாணத்தில் விவாகரத்திற்கு விண்ணப்பித்து […]

இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான காலஞ்சென்ற கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன ஆகியோர் பாரளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (03) இறுதி அஞ்சலி செலுத்தினர். அத்துடன், பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதி கௌரவ ரணில் […]

பாணிபூரிக்கு தடை

கர்நாடக சுகாதாரத்துறையினரால் மாநிலம் முழுவதிலும் உள்ள 250 பாணி பூரி மாதிரிகள் பெறப்பட்டு நடாத்திய பரிசோதனையில் 40 மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வில் நீலம், Tartrazine போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோலி பிளவரை வைத்து செய்யப்படும் கோபி மஞ்சூரியன் மற்றும் சிக்கன் கபாப் போன்ற பிற தின்பண்டங்களில் இதுபோன்ற காரணிகள் இருந்ததால் அவற்றை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதை போல் பானிபூரியிலும் புற்றுநோய் நிறமூட்டும் காரணிகள் இருப்பதால் கர்நாடக அரசு […]

ஒரே ஆண்டில் ரூ 170 கோடி நன்கொடை அளித்த பெண்மணி.

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களாக அறியப்படும் முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி ஆகியோர் செய்யாததை பெண் ஒருவர் செய்துள்ளார். 2023ல் அதிக நன்கொடை அளித்துள்ள பெண்களின் பட்டியலில், இந்தியா வரிசையில் ரோகினி நிலேகனி முதலிடத்திற்கு வந்துள்ளார். பொதுவாக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் நீதா அம்பானி அல்லது அதானி அறக்கட்டளையின் தலைவர் பிரீதி அதானி ஆகியோரே அதிக நன்கொடை அளிப்பவர்கள் என மக்கள் நம்பி வரும் காலகட்டத்தில், 2023ல் ரோகினி நிலேகனி மொத்தமாக ரூ 170 கோடி […]

கண்ணீர் விட்டு கதறிய ரொனால்டோ

ஸ்லோவேனியா அணியுடன் கூடுதல் நேர பெனால்டியை தவறவிட்டதால் ரொனால்டோ கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜேர்மனியில் யூரோ கிண்ணம் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், காலிறுதிக்கு தகுதிபெறும் பொருட்டு, கடைசி 8 அணிகள் கடும் போராட்டத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், ஸ்லோவேனியா அணிக்கு எதிராக கூடுதல் நேரத்தில் அனுமதிக்கப்பட்ட பெனால்டியை ரொனால்டோ தவறவிட்டுள்ளார். ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதுமின்றி சமனில் முடித்துக்கொள்ள, கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் போர்த்துகல் […]

ஒரு தேங்காயும் ஒரு ரூபாயும் போதும்! மாப்பிள்ளை சொல்லும் வியப்பான காரணம்

வேண்டாம் எனவும், தேங்காயும் ஒரு ரூபாயும் போதும் என கேட்டிருப்பது ஆச்சரியமடைய வைத்துள்ளது. பல இடங்களில் நாம் வரதட்சணை கொடுமையை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதிலும் குறிப்பாக கேரள மாநிலத்தில் வரதட்சணை பற்றிய செய்திகள் அதிகம் வலம் வருகின்றது. ஆனால், இங்கு ஒரு மணமகன் ஒருவர் தனக்கு வரதட்சணை வேண்டாம் என்று மணமகள் வீட்டாரிடம் கூறியுள்ளார். இந்திய மாநிலமான ராஜஸ்தான், சிகார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய் நாராயண் ஜாகர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அனிதா வர்மாவுக்கும் திருமணம் […]