எரிபொருளுக்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு

நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரியவந் துள்ளது. சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கையிருப்பைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு […]
தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு

விளைச்சல் குறைந்துள்ளதால் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 10 முதல் 15 ரூபா வரை அதிகரித் துள்ளது. தற்போது சந்தையில் தேங்காய் ஒன்று 80 ரூபா தொடக்கம் 95 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை தென்னை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் தேங்காய் ஒன்றின் விலை 60 ரூபாவாகக் குறைந்திருந்தது. எவ்வாறாயினும், உரப்பிரச்சினை காரணமாக தோட்டங்களில் தேங்காயின் விளைச்சல் குறைவடைந் துள்ளதால், தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை தென்னை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது […]
2005இல் பிரபாகரனே என்னை வீழ்த்தினார்! ரணில் குற்றச்சாட்டு!

“2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது பிரபாகரன்தான் என்னைத் தோற்கடிக்க வைத்தார்.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவால் ஏன் இன்னும் ஜனாதிபதியாக முடியாமல் உள்ளது என ‘சிரச’ ஊடகத்தால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:- “நான் இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். 1999இல் சந்திரிகா மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் முடிவு மாறியது. அதன்பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் […]
நாணய மாற்று விகிதம்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 46 சதம். விற்பனை பெறுமதி 276 ரூபா 89 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 64 சதம் விற்பனை பெறுமதி 233 ரூபா 48 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் […]
200 மில்லியன் ஆண்டுகளில் இலங்கை என்னவாகும்? – ஆய்வுகளில் வெளியான அதிர்ச்சி தகவல்

அமெரிக்கன் ஜெர்னல் ஆப் சயின்ஸ் இதழில் உட்ரெக்ட் பல்கலைக்கழக புவியியலாளர் பேராசிரியர் டூவே வான் ஹின்ஸ்பெர்கன் ஒரு ஆய்வுகட்டுரை எழுதி உள்ளார். அந்த கட்டுரையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார். நமது பூமிக்கு கீழே உள்ள டெக்டோனிக் தகடுகள் தொடர்ந்து நகர்ந்து வருவதால் . அனைத்து கண்டங்களும் தொடர்ச்சியாக நகர்ந்து வருகின்றன. டெக்டோனிக் தகடுகள் மெதுவாக ஆனால் நிச்சயமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து வருகின்றன. இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில், கிழக்கு ஆப்பிரிக்கா […]
கொழும்பு துறைமுக கிழக்கு முனைய கட்டுமானப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய கட்டுமானப்பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தப் பணிகளுக்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் 510 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் 300 மில்லியன் டொலர் கடன் தொகையும் இந்த முதலீட்டில் உள்ளடங்குகின்றது. இந்த கட்டுமானப் பணிகளை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நிறைவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு […]
வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் – அஜித்

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் அடுத்த ஒன்பது மாதங்களுக்கான பொருளாதார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், இந்த ஆண்டில் 5.5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்ததடைந்துள்ளதாக சிலர் […]