இஸ்மாயில் ஹனியே படுகொலை: ஜனாதிபதி கண்டனம்!

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின்(Ismail Haniyeh) படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனம் வெளியிட்டுள்ளார். ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலை செய்யப் பட்டதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அத்தகைய செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவிற்கான கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன், பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று, பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்கள் திருவிழா இடம்பெறவுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்!

இன்று திங்கட்கிழமை (ஜூலை 29) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.4850 ரூபாவாகவும், விற்பனை விலை 307.7765 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
நாமலுக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்ற பந்துல..

அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு எவ்வித அறிவித்தலும் வழங்காமல் ஹோமாகம பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாமல் ராஜபக்ஷ ஒழுக்கத்தை மீறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் இது போன்ற விஷயங்களில் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது என போலீசார் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது மேலும் இந்த தொகுதிக் குழுக் கூட்டத்தில் ஹோமாகம […]
கனடாவுக்கு அனுப்பும் முகவர்கள், விசேட அதிரடிப்படையினரால் கைது..!

ஐரோப்பா உட்பட பல நாடுகளுக்கு இலங்கையர்களை அனுப்புவதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கனடா, ருமேனியா, கட்டார், மலேசியா நியூசிலாந்து உட்பட பல நாடுகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக மோசடி செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இணைந்த சரத்குமார் தேவயானி.

சரத்குமார் மற்றும் தேவயானி இணைந்து நடித்த ’சூரிய வம்சம்’ என்ற திரைப்படம் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 27 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஒரே படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சித்தார்த் நடிக்க இருக்கும் 40வது திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ’8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் […]
இந்த ஆண்டு இதுவரை ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை!

இவ்வருடம் ஜூலை 15 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு 10 இலட்சத்து 95 ஆயிரத்து 675 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் (1,095,675) வருகை தந்துள்ளனர். சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரண இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, இலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலாத்துறையின் உச்ச நிலை பதிவான 2018 ஆம் ஆண்டை விடவும் இவ்வருடத்தில் சிறந்த நிலையை அடைய முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். 2021 ஏப்ரல் 21 […]