பெப்ரவரி 1ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டு இல்லை

பெப்ரவரி முதலாம் திகதி வரை திட்டமிடப்பட்ட மின் தடைகள் எதுவும் இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. ​​இன்றைய தினம் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவரான ஜானக ரத்நாயக்க தெரிவித்தார். பெப்ரவரி 1ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நாளாந்த மின்வெட்டை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை பரிசீலிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று கூடியது. மூன்று அனுமானங்களின் அடிப்படையில் […]

வெளிநாட்டுக் கையிருப்பு தொடர்பில் தவறான உரிமை கோரல்களை உருவாக்குகிறது

இலங்கையில் 3.1 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கையிருப்பு இருப்பதாகக் கூறி, அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் தவறான அறிக்கைகளைப் பரப்புவதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. நிலவும் மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடி களுக்கு மத்தியில் இவ்வாறான அனைத்து அறிக்கைகளும் பொய்யானவை என நிரூபிக்கப்பட் டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் கப்பலில் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இருந்ததாகவும், அதில் […]

அனைவரும் சைக்கிள் வாங்குவோம். அரசாங்கத்தின் புதிய திட்டம் இதோ!

காற்று மாசுபாடு மற்றும் பல காரணிகளை குறைக்கும் வகையில் சைக்கிள் பாவனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தயாராகி வருகிறார். இதன்படி ​சைக்கிள் பாவனையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், நேர விரயத்தைத் தடுக்கவும், சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் பல தொற்றாத நோய்களைக் கட்டுப்படுத்தவும் வாய்ப்புள்ளதால், சைக்கிள் பாவனையை ஊக்குவிப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமரவீர கூறுகிறார். […]

இலங்கையில் சீமெந்து மாஃபியா:

கடந்த இரண்டு நாட்களுக்குள் 31,200 மெட்ரிக் தொன் சீமெந்து இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் சந்தையில் சீமெந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக இலங்கை கட்டிடத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சீமெந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் அரசாங்கம் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என சங்கத்தின் தலைவரான சுசந்த லியனாராச்சி வலியுறுத்தினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சந்தையில் கடுமையான சீமெந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும், நுகர்வோர் அதிகாரசபையின் விலை மற்றும் முகாமைத்துவப் […]

72 ஆண்டுகளுக்குப் பிறகு 20 வீதம் அதிக பணம் அச்சிட்டு சாதனை

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரூ. 149,905 கோடி அச்சிடப்பட்டதால் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் அனைத்துப் பொருட்களும் நம்ப முடியாத அளவுக்கு விலைகள் அதிகரித்து வருவதாக ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங் களுக்கான முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் 25 நாட்களில் அரசு ரூ. 15,704 கோடியை அச்சிட்டுள்ளது. ஜனவரி முதல் டிசம்பர் 2021 வரை மட்டும், அரசாங்கம் ரூ. 67,833 கோடி (678.33 பில்லியன்) அச்சிட்டுள்ளது. அதில் […]

5000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவை தனியார் துறையினருக்கும் வழங்கும் வகையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப் படவுள்ளது. இது தொடர்பில் தொழிற்சங்கங்கள், தனியார் துறை முதலாளிகள் மற்றும் தோட்ட உரிமையாளர்களுடன் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தொழில் ஆணையாளர் நாயகமான பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலின் போது, ​​தொழிற்சங்கங்கள் ரூ. 5,000 கொடுப்பனவு […]

இலங்கை இந்த வருடத்தின் முதல் 25 நாட்களில் 146 பில்லியன் ரூபா அச்சிட்டுள்ளது

2022 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி 146 பில்லி யன் புதிய நாணயத்தாள்களை அச்சிட்டு வெளியிட் டுள்ளது. அதாவது நாளொன்றுக்கு 6 பில்லியன் ரூபா என்றவாறு 25 நாட்களுக்கு அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் […]