அர்ச்சுனாவுக்கு பிணை நிராகரிப்பு!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் மகபேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் திங்கட்கிழமை (05) உத்தரவிட்டுள்ளார். வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு, நகர்த்தல் பத்திரம் ஊடாக திங்கட்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல நீடித்து, மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதே நேரம் அனுமதி […]
மன்னாரில் இளம் தாயின் மரணம் தொடர்பில் வைத்தியசாலையின் தகவல்.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்த இளம் குடும்பப் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம் பெற்று வருவதோடு, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முடிவடைந்த நிலையில் உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி பட்டதாரி இளம் குடும்ப […]
வளர்ப்பு நாய்க்கு அதிக உணவு கொடுத்ததால் பெண்ணுக்கு சிறை.!

நியுசிலாந்து நாட்டில் பெண் ஒருவர் தனது 53 கிலோகிராம் (118 pounds) எடையுடைய வளர்ப்பு நாய்க்கு அதிகமான உணவுகளை கொடுத்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டதுடன், இரண்டு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகமான உணவுகளை குறித்த நாய்க்கு கொடுத்து கொலை செய்துள்ளதாக அவர் மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சங்கத்தின் (SPCA) அறிக்கையின்படி, நுகி என்று பெயரிடப்பட்ட நாய், 2021 ஆம் ஆண்டில் 54 கிலோகிராம் (120 பவுண்டுகள்) எடையும், கிட்டத்தட்ட அசையாத […]
மட்டக்களப்பில் விபரீத முடிவெடுத்த யுவதி..

மட்டக்களப்பில் விபரீத முடிவெடுத்த பெண் மரணம் – பொலிஸ் உத்தியோகத்தர் மீது குற்றச்சாட்டு. மட்டக்களப்பில் இளம் யுவதி ஒருவர் தனது காதலனான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் ஏமாற்றப்பட்ட நிலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிலையில் குறித்த யுவதி தனது காதலானான பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்து பதிவேற்றம் செய்யப்பட்ட குறுந்தகவல்கள் மற்றும் காதலனான பொலிஸ் உத்தியோகத்தரின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். குறித்த சம்பவமானது […]
இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட 85 வீத சிறுமிகள் காதல் என்ற பெயரில் ஏமாறுகிறார்கள்!

16 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 85 வீதமானோர் காதல் என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறும் அவர் கூறினார். சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு மாபெரும் பொறுப்புள்ளது. எனவே சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுக்க முயற்சி எடுப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அடிக்கடி பல் வலிக்கிறதா…

வாய் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. வாய் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது உங்கள் வாயை சுத்தமாகவும், உங்கள் முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஒவ்வொரு முறையும் 2 நிமிடங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்குவதை அமெரிக்க பல் மருத்துவ சங்கம் பரிந்துரைக்கிறது. நீங்கள் சரியாக பல் துலக்கினால், பற்களுக்கு இடையில் மற்றும் நாக்கில் உள்ள பிளேக் மற்றும் பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன. ஈறு நோய் மற்றும் பல் […]
ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள்.

இந்த வருடம் ஆரம்பமான நாள் முதல் இந்தியாவின் பணக்கார குடும்பமான அம்பானி வீட்டில் ஒரே கொண்டாட்டம் தான். காரணம் அவரது இளைய மகன் ஆனந்த் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்தது. ஆனந்தின் நீண்டநாள் தோழியான ராதிகாவுடன் தான் திருமணம் நடந்தது. படு கோலாகலமாக கடந்த ஜுலை 12ம் தேதி இவர்களின் திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்துகொண்ட மாப்பிள்ளைக்கு நெருங்கிய பிரபலங்களுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான வாட்ச் பரிசாக வழங்கப்பட்டது. இவர்களது திருமணத்திற்கு வந்த சினிமா பிரபலங்கள் […]