பேஸ்புக்கில் இன்னும் தொடரும் பிரச்சார நடவடிக்கைகள்..

சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரங்களை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், பிரசாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் நாம் கேட்டபோது, தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரத்தை நிறுத்துவது நடைமுறையில் கடினமாகிவிட்டது. சமீபத்தில், சமூக ஊடகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ள கிட்டத்தட்ட எண்பது பேர் தேர்தல் ஆணையத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களைத் தடுக்க அறிவுறுத்தப்பட்டனர் இது தொடர்பில் எமது தேர்தல்கள் […]

இலங்கையில் 38 நாடுகளுக்கான விசா கட்டணம் ரத்து !

சிங்கப்பூரின் நெறிப்படுத்தப்பட்ட ‘one-chop’ அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், 38 நாடுகளுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஜனாதிபதிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த தீர்மானம் விசா சாளரங்களில் நெரிசலைக் குறைக்க உதவும் என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

திடீரென வெளியான அதி விசேட வர்த்தமானி!

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விஜயதாச ராஜபக்ஷ அந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தமையே இதற்குக் காரணமாகும்.

இந்தியன் 2 படத்தால் நொந்து போயிட்டேன், பிரியா பவானி!

இந்தியன் 2 படம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் படம் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற காரணத்தால் கடுமையாக விமர்சித்தனர். முதல் பாகம் இன்று வரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு படமாக இருக்கும் நிலையில், அதற்கு எதிர்மறையாக இந்தியன் 2 படம் அமைந்தது என்றே சொல்லவேண்டும். படத்தில் காட்சிகளை தான் ட்ரோல் செய்தார்கள் என்று பார்த்தால் படத்தில் நடித்த நடிகை பிரியா பவானி சங்கரை கடுமையாக ட்ரோல் செய்தனர். ட்ரோல் செய்ய மிகவும் […]

அர்ச்சுனா பிணையில் விடுதலை!

மன்னார் நீதிமன்றுக்கு கைவிலங்குடன் அழைத்துவரப்பட்ட மருத்துவர் அருச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வைத்தியர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை,பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை, அரச சேவைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றசாட்டுக்களின் அடிப்படையில் வைத்தியர் அருச்சுனா கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று மன்னார் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சற்று முன் அவர் பேஸ்புக்கில் நன்றி தெரிவித்து […]

18 வயதில் திருமணம், பரிதாபமாக உயிரிழந்த யுவதி!

18 வயதுடைய திருமணமான யுவதியொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமையால், பண்வஸ்நுவர, கிரிமெட்டிய கெலினாவல பிரதேசத்தில் நேற்று (31) பதற்றமான சூழல் ஏற்பட்டது. கணவனால் தாக்கப்பட்டே யுவதி உயிரிழந்துள்ளதாகவும் சந்தேகநபரான கணவரை இதுவரை பொலிஸார் கைது செய்யவில்லை எனவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர். கிரிமெட்டிய கெலினாவல பிரதேசத்தில் வசித்து வந்த 18 வயதுடைய செனுரி பிரேமதிலக என்ற யுவதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். செனுரியின் கணவரின் தாக்குதலே அவரது மரணத்திற்குக் காரணம் என்று உறவினர்கள் குற்றம் […]

பிக்பாஸில் இருந்து விலகுவதாக அறிவித்த கமல்ஹாசன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை அவரின் எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், “7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா பணிகள் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை. உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் […]