எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிகள்

தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். சக்தி மற்றும் மின்சக்தி அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் தீவிர கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், காலதாமதமின்றி எரிபொருளைப் பெறுதல், தொடர்ந்து எரிபொருளை வழங்குதல், மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை வழங்குதல் ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 2022 மார்ச் 5 முதல் […]
பொருளாதார நெருக்கடி… இலங்கை அறிக்கை

சிலோன் சேம்பர் பொருளாதார நடவடிக்கைகளில் ஸ்தம்பிதத்தைத் தவிர்ப்பதற்காக மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை மீட்டெடுக்க அவசர நடவடிக்கையை நாடுகிறது இலங்கை வர்த்தக சம்மேளனம் அதன் அங்கத்தவர்கள் மீதும் பொதுவாக பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகள் மீதும் ஏற்பட்டுள்ள பாதகமான விளைவுகள் குறித்து கவலையுடன் குறிப்பிடுகிறது. இதன் விளைவாக மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் எரிபொருள் கிடைப்பதில் அடிக்கடி ஏற்படும் இடையூறுகள். இந்த பிரச்சினைகள் அனைத்தும் நாடு அனுபவிக்கும் அந்நிய செலாவணி பற்றாக்குறையின் கிளைகள் என்று சேம்பர் கருதுகிறது […]
இலங்கை ரஷ்யாவிடம் 300 மில்லியன் டொலர் கடன் கேட்டுள்ளது

கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காக ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளதாக Hirunews செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை தற்போது பாரிய வெளிநாட்டு நாணய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ரஷ்யாவிற்கு எதிரான ஐ.நா வாக்கெடுப்பின் போது இலங்கை வாக்களிக்கவில்லை. இதேவேளை, கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் தலைமையிலான ரஷ்ய வர்த்தகக் […]
5ஆம் திகதி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது!

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளனர். மின்சார துண்டிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்றது தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது பணிப்புரை விடுத்துள்ளதாக அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாமதமின்றி எரிபொருளை இறக்குமதி செய்தல், கையிருப்பை தொடர்ச்சியாகப் பேணல், மின் உற்பத்திக்கான எரிபொருள் […]
600 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வது தடை

600 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை தடைசெய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் 600 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை தடைசெய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன அமைச்சர் உதயகம்மன்பில இதனை தெரிவித்துள்ளார். இலங்கை முன்னுரிமைகளை அடையாளம் காணவேண்டியநிலையில் உள்ளது,வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைவடைந்தால் மருந்துகள் எரிபொருட்கள் கைத்தொழிலுக்கான மூலப்பொருட்கள்போன்றவை மாத்திரம்அத்தியாவசிய பொருட்களை கருதப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இறக்குமதிகளை புறக்கணிக்காததன் விளைவையே இலங்கை தற்போது எதிர்டிகொள்கின்றது என அமைச்சர் […]
டொலர் இல்லை: வங்கி அட்டை இறக்குமதி நிறுத்தம்

நாட்டிலுள்ள குறிப்பிட்ட சில அரச மற்றும் தனியார் வங்கிக் கணக்கு வைத்திருப்ப வர்களுக்கு அந்தக் கணக்குகளிலிருந்து பரிவர்த்தனை செய்வதற்குத் தேவையான அட்டைகளை வழங்குவது பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். வங்கி அட்டை காலாவதியான பிறகு புதிய சேமிப்புக் கணக்குகளைத் திறக்க முடியாத தாலும், புதிய அட்டையைக் கோர முடியாத தாலும், அட்டைகளை இழந்தவர்கள் புதிய அட்டைகளைப் பெற முடியாததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் […]
உலக எண்ணெய் விலை உச்சத்தை தொட்டது

உலக சந்தையில் பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 5.8% அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 111.09 டொலராக நிர்ணயிக் கப்பட்டது. ஜூலை 2014க்குப் பிறகு ஒரு பீப்பாய் ப்ரென்ட் மசகு எண்ணெய்க்கான அதிகபட்ச விலை இதுவாகும். இதேவேளை வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட், ஒரு பீப்பாய் 6% உயர்ந்து 109.30 டொலராக அதிகரித்துள்ளது. இது 2013 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பெறப்பட்ட அதிகபட்ச விலையாகும். […]