வைத்தியர் அர்ச்சுனாவுக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியலில்..

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது வழக்கானது இன்றையதினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்காமை, பிணையாளிகளை அவதூறுபடுத்தியமை, பிணையின் நிபந்தனைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டு […]
விபத்தில் இளம் கணவன், மனைவி உயிரிழப்பு.

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அக்குரஸ்ஸ சியம்பலாகொட – பிடபெத்தர வீதியில் போபகொட சந்திக்கு அருகில் புதன்கிழமை (26) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கணவருடன் சென்ற ஆசிரியை பிடபெத்தரை, மெதிரிபிட்டிய பாடசாலையில் கிடைத்த பரிசில்களுடன் மோட்டார் சைக்கிளில் மகதுரையில் உள்ள தமது வீட்டை நோக்கி கணவருடன் […]
இன்றைய தங்க விலைச் சுட்டெண்

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று (23) திங்கட்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 26,375 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 211,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும்,22 கரட் ஒரு கிராம் தங்கம் 24,400 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 195,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
அநுரவின் வெற்றியை கொண்டாடும் யாழ்ப்பாணம்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆதரவாளர்கள் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இன்று காலை பொங்கல் பொங்கி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை ஆதரவாளர்கள் கொண்டாடியுள்ளனர். இதன்போது பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுர தெரிவு!

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அதிககூடிய வாக்குகளை பெற்று அனுகுமார திசாநாயக்க தெரிவாகியுள்ளார். இலங்கையில் நேற்று நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் மனதை வென்று அனுர வெற்றியீட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டானது 5 வருடத்தில் தனது 3% வாக்கு வங்கியை 50% இற்கு மேலாக உயர்த்தியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட 21 அமைப்புக்களின் அரசியல் கூட்டாக அனுர குமார திசனாயக்கவை முன்னிறுத்தி இம்முறை இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கியது. 73 பேரைக்கொண்ட தேசிய […]
டொலர்களை திருப்பிச் செலுத்திய இலங்கை.

இலங்கை அண்மையில், 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவுக்கு திருப்பிச் செலுத்தியதுடன், ஆசிய கிளியரிங் யூனியனுக்கு செலுத்த வேண்டிய 2.2 பில்லியன் டொலர் கடனுடன் கூடுதலாக 200 மில்லியன் டொலர்களை திருப்பிச் செலுத்தியதாக நிதி அமைச்சக தரப்புகள் தெரிவித்துள்ளன. இலங்கை மத்திய வங்கி, ஆசிய கிளியரிங் யூனியனின் கடன் மற்றும் இந்தியாவின் 400 மில்லியன் டொலர் பரிமாற்றத்தை தவணைகளில் திருப்பிச் செலுத்தி வருகிறது. இதன்படி 2 பில்லியன் டொலர்களை ஏசியூவுக்கும், 400 மில்லியன் டொலர்கள் இந்திய ரிசர்வ் […]
இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 முடிவுகள்! சிறப்பு நேரலை.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலையை இந்த இணைப்பில் பார்வையிடலாம். Sri lanka Presidential Election Results – 2024 Sri lanka Presidential Election Results – 2024