நான்கு சகோதாரர்கள் எப்படி ஒரு தீவை பலவீனப்படுத்தினார்கள்

கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையின் முதல்குடும்பம் தானே உருவாக்கிய பல நெருக்கடிகளிற்கு தலைமைதாங்குகின்றது 22 மில்லியன் மக்களை கொண்ட இலங்கைத் தீவு அதன் வரலாற்றில் மிகமோசமான பொருளாதார குழப்பநிலையை எதிர்கொள்கின்றது. மோசமான அறுவடைக்கு வழிவகுத்துள்ள உரத் தடைகள் முதல் இலங்கையின் முதல் குடும்பம் அந்நியசெலாவணி நெருக்கடியை கையாள்வதில் தோல்வியை சந்தித்துள்ளதால் நாடு பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தீர்வுகள் எதுவுமில்லாத நிலையில் காணப்படுகின்றார். அவர் இதுவரை தனது இரு அயல்நாடுகளான சீனா இந்தியாவை […]

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துங்கள், ரணில்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும். அதன் கொள்கை திட்டங்களுடன் இணக்கப்பாட்டினை எட்டினால் மாத்திரமே நிதி உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அதற்கான நடவடிக்கைகள் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சமூக வலைத்தளத்தினூடாக இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் வழங்கிய நேர்காணலொன்றிலேயே முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். அவர் வழங்கிய நேர்காணலின் சுருக்கம் வருமாறு : எதற்காக […]

இலங்கைக்கு நாளாந்தம் 4 கப்பல் எரிபொருள் தேவை

நாட்டின் கடற்பரப்பில் கடந்த 6 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ள எண்ணெய் கப்பலுக்கு செலுத்த வேண்டிய 42 மில்லியன் அமெரிக்க டொலர்களை விநியோகிப்பதற்கு அரச மற்றும் தனியார் வங்கிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. எண்ணெய் கப்பலுக்கு கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் எரிபொருள் தரையிறக்கல் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும்.நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது என பொது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமாயின் நாட்டுக்கு ஒரு நாளைக்கு மாத்திரம் 4 எண்ணெய் கப்பல்கள் வருகை […]

நாட்டில் மண்ணெண்ணெய் பாவனை அதிகரிப்பு

தற்போது நிலவும் சமையல் எரிவாயுவின் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டில் மண்ணெண்ணெய் பாவனை அதிகரித்துள்ளது. பொதுவாக நாட்டில் நாளாந்த மண்ணெண்ணெய் பாவனை கடந்த காலத்தில் 600 மெற்றிக் தொன்களாகும். ஆனால் தற்போது நாளாந்த பாவனை 850 மெற்றிக் தொன்களாக அதிகரித்துள்ளது. மண்ணெண்ணெயை விற்பனை செய்யும் எரிபொருள் நிலையங்களுக்கு ஆகக் கூடுதலான வகையில், மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு இல்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை ,நாட்டில் எதிர்வரும் சில தினங்களில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு முழு […]

தடை செய்யப்பட்ட பொருட்கள் மீண்டும் பாவனையில்

8 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்குத் தடை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போதிலும், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை தொடர்ந்து, பிளாஸ்டிக் கரண்டிகள், ஐஸ்கிரீம் கோப்பைகளுக்குப் பதிலாக பன்னாட்டு நிறுவனங்கள் மாற்றுப் பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளன. எவ்வாறாயினும், குறித்த வர்த்தமானி அறிவித்தல் தாமதமாகி வருவதனால் இந்த நிறுவனங்கள் மீண்டும் பிளாஸ்டிக் பாவனைக்கு திரும்புவதாக சுற்றாடல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து […]

மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கடந்த வாரம் பாரியளவில் அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் மொத்த விலை, இன்று காலை பாரியளவில் வீழ்ச்சியடைந்து, மரக்கறிகள் விற்பனையாகாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மரக்கறிகள் வாங்க வரும் வியாபாரிகள் வருகை தராததும், எரிபொருள் தட்டுப்பாடுமே மரக்கறிகளின் விலை வீழ்ச்சி மற்றும் விற்பனையின்மைக்கு முக்கிய காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகையான மரக்கறிகள் வந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவித்தனர். கடந்த […]

ஊக்குவிப்பு கொடுப்பனவு இனி வழங்கப்பட மாட்டாது

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு, வழங்கப்பட்ட ஊக்குவிப்பு கொடுப்பனவு இனி வழங்கப்பட மாட்டாது என மத்திய வங்கி அறிவித்துள்ளது. செலாவணி வீதமானது, வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்களையும் ஏற்றுமதி வருவாய்களை மாற்றுவதனையும் தூண்டும் நோக்குடன் வழங்கப்பட்ட ஊக்குவிப்பு மட்டத்தினை விடவும் தற்போது அதிகரித்துள்ளது. இதற்கமைய, நடைமுறை செலாவணி வீதம், வெளிநாட்டு வேலையாட்களின் வெளிநாட்டுச் செலாவணி பணவனுப்பல்களின் மீதும் ஏற்றுமதியாளர்களின் தேறிய வருவாய் மீதான உயர்ந்த ரூபா பெறுமதியின் மீதும் உயர் வருமானத்தினை வழங்குகிறது. அத்துடன் இந்த மாதம் வெளிநாடுகளிலிருந்து […]