சுவிட்சர்லாந்தில் முகத்தை முழுமையாக மூட தடை- மீறினால் அபாராதம்

சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. […]

48 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு.

48 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு ; பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகின்றது. எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையின் வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் […]

பீர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதால் அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணம்.

பீர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நேரடிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. U.K.வின் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத்தின் தலைவர் பீர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கச்சா அரிசி நெல் அறுவடை மூலம் உற்பத்தி செய்யப்படுவதாக சேமசிங்க சுட்டிக்காட்டுகிறார். மேலும் கருத்து தெரிவித்த யு.கே.சேமசிங்க, “பீர் தயாரிக்க கச்சா அரிசி தேவை. ஆனால் பீர் தயாரிக்க தேவையான கச்சா அரிசி நெல் அரிசியில் […]

8888 வேட்பாளர்கள்  போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான  வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில்  ஈடுபட்டுள்ளனர்

பொதுத்தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளா ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இது மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும்,பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வழமையாக […]

இலங்கை ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள டோக்கன் எடுப்பது எப்படி?

இன்று முதல் வன்டே சேர்விஸ்/ நோர்மல் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் ஒன்லைன் மூலம் டோக்கன் எடுப்பதற்கு அப்ளை பண்ண முடியும். 2024.11.06 ஆம் திகதி முதல் கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளின் வசதி கருதி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு புதிய முறையொன்று நடைமுறைப்படுத்தப்படும்.

உலகின் சிறந்த கடவுச்சீட்டை கொண்ட நாடாக சிங்கப்பூர் – இலங்கை 105 இருந்து 95 வது இடத்தில்!

அக்டோபர் 2024 இல் வெளியிடப்பட்ட சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, சிங்கப்பூர் மீண்டும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக பெயரிடப்பட்டுள்ளது, அதன் குடிமக்களுக்கு 195 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகியவை இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டன, சமீபத்திய தரவரிசையின்படி 192 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகின்றன. அமெரிக்கா 8வது இடத்தைப் பிடித்தது, அதன் குடிமக்களுக்கு 186 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவு வழங்குகிறது. இதற்கிடையில், […]

யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய், அதே விறுவிறுப்புடன் கட்சியின் முதல் செயற்குழு கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளார். திரையுலகை தாண்டி, அரசியலுக்கு வந்துள்ள விஜய் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் தனதாக்கிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், யாரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்யக்கூடாது என்று தொண்டர்களுக்கு கண்டிப்புடன் விஜய் வலியுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் நடந்த செயற்குழு கூட்டத்திலும் விஜய் இதை கண்டிப்புடன் வலியுறுத்தி இருக்கிறார். அரசியல் கட்சி தலைவர்களை மட்டுமல்ல, திரையுலகில் முன்னணியில் […]