2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முக்கிய அப்டேட்!

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நாளை (14) நடைபெறவுள்ளது. தேர்தலில் மொத்தம் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுடையோர் ஆவார். நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர் அட்டை பெறாமல், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருந்தால், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணத்தை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம் என தேர்தலகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பின்வரும் ஆவணங்கள் அதற்கு பொருந்தும்: தேர்தல் பாதுகாப்பு […]
உலக நாயகன் பட்டத்தை துறந்த கமல் ஹாசன்!

தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் கமல் ஹசான், ‘உலக நாயகன்’ உள்ளிட்ட அடைமொழிகளைத் துறக்கும் அறிவிப்பினை திடீரென வெளியிட்டுள்ளார். மேலும், தன்னை இனி ‘கமல்ஹாசன்’ அல்லது ‘KH’ என்று அழைத்தாலே போதும் என்று சினிமாத் துறையினர், ஊடகவியலாளர்கள், கட்சியினர், அரசியல்வாதிகள், இந்திய மக்கள் என அனைவருக்கும் வேண்டுகோளும் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் […]
கொழும்பு, தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான வீழ்ச்சி!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாகவும் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (12) வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 212,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 195,500 ரூபாவாகவும் உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 213,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 197,000 […]
நாடாளுமன்ற தேர்தல்; வாக்கு எண்ணும் முறை பற்றிய தெளிவூட்டல்!

எதிர்வரும் நவம்பர் 14 வியாழன் அன்று நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணுவதற்கான செயல்முறையினை தேர்தல்கள் ஆணைக்குழு அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் தெளிவுபடுத்திய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் நவம்பர் 14 ஆம் திகதி மாலை 04.15 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவித்தார். வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையத்துக்கு வருவதை அடிப்படையாகக் கொண்டு, வழக்கமான வாக்கு எண்ணும் பணிகள் அன்றைய […]
மின் கட்டண குறைப்பு தொடர்பில் புதிய தகவல்

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான புதிய பிரேரணையை எதிர்வரும் வாரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகள் முன்னதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பிரேரணையை மீளாய்வு செய்து கடந்த 8ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. இதற்கு இரண்டு வார கால […]
எச்சரிக்கை ! 5000 இலங்கை ரூபா நாணயத்தாள்களை பயன்படுத்தும் போது அவதானம்..

கம்பஹா – மினுவாங்கொட பகுதியில் 25 போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் 90 வடகொரியா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நிட்டம்புவ, பரண வயங்கொட பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் மேலும் இருவருடன் முச்சக்கரவண்டியில் ஹிக்கடுவை நோக்கி பயணித்த நிலையில், மினுவாங்கொடையில் பொருட்களை கொள்வனவு செய்த போது கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவருடன் முச்சக்கரவண்டியில் […]
தமிழ் தேசியம் என்ற சொல்லின் அர்த்தமே தெரியாத இலங்கை தமிழ் இளைஞர்கள்! நாடாளுமன்ற தேர்தல் 2024

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள், நெடுங்காலமாக சுயநிர்ணய உரிமை, 13-வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், சமஷ்டி, தமிழ் தேசியம், அதிகார பகிர்வு போன்ற விடயங்களை கோரி வருகின்றார்கள். இலங்கையில் உள்நாட்டு போர் இடம்பெறுவதற்கு முன்பாகவே, தமிழர்களுக்கான உரிமைப் போராட்டம் ஆரம்பமானது. இலங்கையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையில், இன்றும் அரசியல்வாதிகள் தமது பிரசாரங்களில் இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தியே பேசி வருகின்றனர். குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகளினால் அரசியல் மேடைகளில் பேசப்படுகின்ற இந்த […]