எதிர்வரும் வாரம் முதல் 10 மணித்தியால மின்வெட்டு.

எதிர்வரும் வாரம் முதல் நாட்டின் சகல பகுதிகளிலும் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்தியொன்று குறிப்பிடுகிறது. இச்செய்தியின் உண்மைத்தன்மையை அறிய எமது செய்திப் பிரிவு இலங்கை மின்சார சபையிடம் வினவியது. இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி, குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், இதுவரையில் இலங்கை மின்சார சபையினால் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். அத்துடன் தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் […]

பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சி

நாட்டில் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 33 ஆயிரத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த வருடம் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4,238,760 ஆக குறைவடைந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 4,272,289 ஆக காணப்பட்டது. இந்த தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 33,529ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 31,174 இனால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் ஏனைய […]

எரிவாயு கோரி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்

எரிவாயு கோரி கிரேன்ட்பாஸ் பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று அதிகாலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை, கொழும்பு – ஹைலெவல் வீதியின் நாவின்ன பகுதியில் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இவற்றை தொடர்ந்து, மட்டக்களப்பு – செங்கலடி சந்தியில் தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பல்கலைகழக மாணவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு பல்கலைகழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இருந்து பேரணியாக சென்ற மாணவர்கள் […]

இரசாயன உரம் விரைவில் வழங்கப்படும்

நெற்செய்கைக்கு தேவையான இரசாயன உரத்தை விரைவில் வழங்குவதாக விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார். சிறுபோக உற்பத்திக்கு தேவையான திண்ம மற்றும் திரவ உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 65,000 மெட்ரிக் தொன் உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஜானக்க வக்கும்புர மேலும் தெரிவித்தார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 […]

நாட்டின் கையிருப்பின் தற்போதைய நிலை

ஏப்ரல் மாத இறுதியில் இலங்கையிடம் உத்தியோகபூர்வ கையிருப்பு 1,827 மில்லியன் அமெரிக்க டொலர் இருந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஈட்டிய அந்நியச் செலாவணித் தொகை 1,618 மில்லியன் அமெரிக்க டொலர் எனவும் அது தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ கையிருப்பு மார்ச் மாதத்தில் 1,917 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. அந்நிய செலாவணிக் கையிருப்பில் 1,702 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. எனினும், சீன மக்கள் வங்கியிலிருந்து பெறப்பட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய மாற்று வீத வசதியை […]

15 மணி நேர மின் வெட்டை எதிர்கொள்ள நேரிடலாம்

எதிர்காலத்தில் 15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி நேற்று அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். அந்நியச் செலாவணி இல்லாத பொருளாதார நெருக்கடி மோசமாகி விட்டதாகவும், அந்நியச் செலாவணிக் கையிருப்பு 50 மில்லியன் டொலருக்கும் குறைவாக உள்ளதாகவும் அவர் கூறினார். எதிர்காலத்தில் எரிபொருள் இருப்புகளை இறக்குமதி செய்வது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், அதற்கமைய மின்சார விநியோகம் பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு முதலில் நாட்டில் நிலையான […]

இந்திய 1 பில்லியன் கடன் வசதியின் செயற்பாட்டு விபரங்கள்

இலங்கையின் உணவு, சுகாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, இந்திய அரசு 1 பில்லியன் அமெரிக்க டொலரை ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா மூலம் மார்ச் 17, 2022 அன்று இலங்கை அரசுக்கு சலுகைக் கடனாக வழங்கியது. அரிசி, செத்தல் மிளகாய் போன்ற உணவுப் பொருட்கள் ஏற்கனவே அதன் கீழ் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் முன்னுரிமைகளின் அடிப்படையில் சீனி, பால் மா, கோதுமை, மருந்துகள், எரிபொருள் மற்றும் தொழில்துறை மூலப்பொருட்களை வழங்குவதற்கான வேறு பல […]