தேயிலை ஏற்றுமதி 08 வீதத்தால் குறைந்துள்ளது

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி 08 வீதத்தால் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 130 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 125 மில்லியன் கிலோ மாத்திரமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி […]
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவ முகாமில் எரிபொருள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு வசதியாக அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களில் இருந்து எரிபொருளை பெறுவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. தம்மால் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்ததன் பிரகாரம் எரிபொருளை பெற்றுக்கொள்ள இவ்வாறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு வரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பை […]
இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள அமெரிக்கா!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உதவ முன்வருவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சங் தெரிவித்துள்ளார். தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் மூலம் குறித்த விடயத்தை தெரிவித்தள்ளார். அத்துடன் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவின் அடிப்படையிலேயே இவ்வாறு அமெரிக்கா உதவ முன்வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி […]
இரவு கொழும்பு வரும் பெற்றோல் கப்பல்!

35,000 மெற்றிக் தொன் பெற்றோல் இருப்புகளை ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (18) இரவு கொழும்பை வந்தடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெற்றோல் கையிருப்பை பெற்றவுடன், ஆய்வுப் பணிகள் முடிந்தவுடன் பெற்றோலை இறக்கும் பணி தொடங்கும் என்றும் அதன் பிறகு விரைவில் விநியோகம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோற்றுப்போன கோட்டாபயவின் நம்பிக்கை, தப்பியோடியதன் முழுக் கதை! புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி […]
ஜூலை 21 முதல் சிபெட்கோ எரிபொருள் விநியோகம்

சிபெட்கோ பெற்றோல் நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் QR குறியீடு மற்றும் வாகனத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் எனவும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அன்றைய தினம் முதல் எரிபொருள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி முதல் இராணுவத்தினரால் வழங்கப்பட்டு வந்த ‘துண்டுச் சீட்டு (டோக்கன்) […]
ரணில் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தியுள்ளார்

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தியுள்ளார். இதில், மே 13ஆம் திகதி தாம் பிரதமராகப் பதவியேற்ற போது, நாளொன்றுக்கு 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்பட்டதன் மூலம் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்தது. அதன் பின்னர் இரண்டு மாதங்களில் மின்துண்டிப்பு 3 மணித்தியாலமாக குறைக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டு நாட்டில் எரிவாயு தட்டுப்பாடும் தீர்க்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் எரிபொருள் விநியோகத்திற்கு கடினமான காலமாக இருக்கும் என நான் முன்னதாக தெரிவித்த நிலையில், டீசல் இருப்புக்கள் பாதுகாக்கப்பட்டு […]
GOTA GO HOME உறுப்பினர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி?

காலி முகத்திடல் போராட்டத் தளமான கோட்டா கோ ஹோமின் மூன்று முன்னணி செயற்பாட்டாளர்கள் வெளிநாடுகளில் இருந்து மூன்று உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு பெருமளவிலான நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் அறிக்கைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. எனினும் குற்றப்புலனாய்வுத்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ரட்டா, திலான் சேனாநாயக்க மற்றும் அவிஷ்க விராஜ் கோனார […]