இரகசியமாக கடிதம் அனுப்பிய சத்தியலிங்கம்; சாணக்கியன் சுமந்திரனின் கூட்டுச்சதி அம்பலம்!

பாராளுமன்றத்தில் சீனியோரிட்டி அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்படுவது வழமை. அந்த சீனியோரிட்டி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஆண்டின் அடிப்படையிலும், எத்தனை தடவை பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டார்கள் என்ற அடிப்படையிலும் தான் வழங்கப்படுவது பாராளுமன்ற மரபு. இலங்கை தமிழரசு கட்சி தற்போதைய 10ஆவது பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தின் 3ஆவது பெரிய கட்சியாக உள்ளது. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவராக சிறீதரன் இருக்கிறார். சிறீதரன் 2010 இல் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். தொடர்ச்சியாக நான்கு தடவைகளில் இரு […]
திருகோணமலை தமிழரசு மத்திய குழுவில் நடந்த விடயங்கள்! – எனக்கு சொந்த சுயபுத்தி இருக்கிறது.

நேற்றைய தினம் திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்த கூட்டத்தின் போது சிறீதரனின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பல முன்மொழிவுகளை சுமந்திரன் தரப்பு நடைமுறைப்படுத்த எத்தனித்திருக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சிகள் எவையும் கைகூடவில்லை என கூட்டத்தில் கலந்துகொண்ட தரப்புக்கள் தெரிவித்தனர். பாராளுமன்ற குழு சர்வதேச தூதுவர்களுடன் சந்திப்புக்களை நடாத்தும் போது சுமந்திரனையும் அழைத்து செல்ல வேண்டும் என்று சாணக்கியன் ஒரு முன்மொழிவை கொண்டுவந்திருந்தார். ஆனால் அப்படி தேவையில்லை, பாராளுமன்ற குழுவை சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் அழைத்தால் […]
செருப்பைக் கழட்டி அடித்தாலும் சிரித்துக் கொண்டே எழுந்து நிற்பேன்..

பிக் பாஸ் தமிழ் சீசன் 8இன் டாப் 6 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் முத்துக்குமரன். முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மனதை வென்ற போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் முத்துக்குமரன், டைட்டிலை வெல்லுவாரா இல்லையா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். இப்படியான சூழலில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற, மாகபா ஆனந்த் டாப் 6 போட்டியாளர்களை பேட்டி எடுத்தார். அதில் முத்துக்குமரனைப் பேட்டி எடுக்கும்போது, அவர் கூறிய பலவிஷயங்கள் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது குறிப்பாக அவர் பேசும்போது, […]
மட்டக்களப்பில் வைத்தியரின் தவறால் உயிரிழந்ததா குழந்தை..?

கரடியனாறு வைத்தியசாலையில் காச்சலுக்காக சிகிச்சை பெற்ற குழந்தை வீடுவந்து வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்தை பருகக் கொடுத்த நிலையில்.. குழந்தையின் உடல் நீல நிறமாக மாறி உயிரிழந்ததாகவும் வைத்தியரின் அசமந்தப்போக்கே இந்த மரணத்திற்கு காரணம் என குழந்தையின் தந்தை நேற்று வைத்தியசாலையில் வைத்து கருத்து தெரிவிக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இக் குழந்தையின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என நாமும் வலியுறுத்துகிறோம்
பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் ஜெக்குலின் செய்த சாதனை!

பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே இதுவரை யாரும் படைத்திடாத சாதனையை ஜெக்குலின் செய்துள்ளார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இதில் கடந்த வாரம் அருண் பிரசாத் மற்றும் தீபக் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். எனவே, டொப் 5 என போட்டியாளர்களின் எண்ணிக்கை சுருங்கியிருக்கிறது. பைனலை நோக்கி நகரும் வேளையில் கடந்த வாரம் எல்லா போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டிருந்தார்கள். இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் இருந்து 15ஆவது […]
யாழில் மிதந்து வந்த வீடு! – ஏசியாவில் இறந்து போனவர்களுக்கு சடங்கு செய்து கடலில் விடுவது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கடல் பகுதியில், இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களினால், கடல் சீற்றங்கள், புயல், நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது. மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா போன்ற ஏதாவது ஒரு நாட்டில் இருந்து இவ்வாறான பொருட்கள் கடலில் மிதந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை பிரதிபலிக்கும் பல […]
டின் மீன்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பாதியளவான டின்மீன் உற்பத்திகள் எதுவித தரச்சான்றிதழ்களும் அற்றவை என தகவல் வௌியாகியுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்களின் பிரகாரம், இலங்கையில் 28 வர்த்தக நாமங்களின் கீழ் டின்மீன்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. இவற்றில் 15 வர்த்தக நாமங்களைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே தரச்சான்றிதழ் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுள்ளன. அவற்றின் மூலமாக சந்தைப்படுத்தப்படும் 48 வகையான டின்மீன்களுக்கு இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. அதோடு ஏனைய 13 வர்த்தக நாமங்களைக் கொண்ட […]