எல்லைகள் கடந்த மனிதாபிமானம்..

தேசம், எல்லைகள், மொழிகள் என நாம் ஆயிரம் பிரிவினைகளை வகுத்து வைத்திருக்கலாம். ஆனால் நடுக்கடலில் தத்தளிக்கும் ஒரு உயிருக்குத் தேவைப்படுவது தேசத்தின் வரைபடமல்ல.. “நீ பாதுகாப்பாக இருக்கிறாய்” என்ற ஒரு ஒற்றை அரவணைப்புதான்..இன்று, ஈரானியக் கப்பலான ‘புஷேர்’ (Bushehr) பணியாளர்கள் 208 பேரின் வாழ்வில் எமது திருகோணமலை (Trincomalee) ஒரு வரப்பிரசாதமாக மாறியிருக்கிறது.ஆழ்கடலில் தவித்துக் கொண்டிருந்த அந்த 208 சகோதரர்களும், திருகோணமலைத் துறைமுகத்தின் மண்ணைத் தொடும் அந்த நிமிடம்… அது வெறும் தரை இறக்கம் அல்ல.. பல […]

மன்னாரில் பணத்துடன் 4 பெண்கள் கைது!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டு திட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதன்கிழமை (04) இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண் உட்பட நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பெருந்தொகை பணத்தையும் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர் நேற்று வியாழக்கிழமை (05) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் படி, வீட்டிலிருந்து தாலிக்கொடி, […]

குவைத்தில் அமெரிக்க போர் விமானங்கள் விழுந்து நொறுங்கின

“பல அமெரிக்க போர் விமானங்கள் இன்று காலை விபத்துக்குள்ளானன” என்று குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. “பணியாளர்கள் காயமின்றி உயிர் பிழைத்தனர், அவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். பணியாளர்களின் உடல்நிலை சீராக உள்ளது” என்று அது மேலும் உறுதிப்படுத்துகிறது. “இந்த நிகழ்வுகளின் சூழ்நிலைகள்” குறித்து அறிய அதன் அமெரிக்க கூட்டாளியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், “சம்பவத்திற்கான காரணங்கள்” குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

யாழில். காணி பிரச்சனையில் ஒருவர் அடித்துக்கொலை – மூவர் தலைமறைவு

யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்,கொலை சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சனை ஒன்று நிலவி வந்த நிலையில் , இன்றைய தினம் […]

இந்தியா-பாகிஸ்தான் மோதல்; 15 தனியார் ஜெட் விமானங்கள்

பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற 2026 ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் உயர்மட்ட இந்தியா – பாகிஸ்தான் மோதலைக் காண ஏராளமான சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் 15 சிறப்பு தனியார் ஜெட் விமானங்களில் கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர். இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோதலின் உலகளாவிய ஈர்ப்பை எடுத்துக்காட்டும் வகையில், பல நாடுகளைச் சேர்ந்த உற்சாகமான ரசிகர்கள் சிறப்பு விமானங்களில் பயணித்ததாக விமான நிலைய […]

மஸ்கின் திட்டம் வெற்றியளித்ததா? இளைஞரின் நெகிழ்ச்சி அனுபவம்!

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கின் மூளையில் சிப் பொருத்தும் செயற்திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் அதன் செயற்பாடுகள் குறித்து பேசியுள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த செபாஸ்டியன் கோம்ஸ் பெனா (Sebastian Gomez-Pena) என்ற இளைஞர், நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கிய சிப்பை பொருத்திக் கொண்டுள்ளார். பிரித்தானியாவில் இருந்து மட்டும் 07 பேர் இந்த சாதனத்தை பொருத்திக் கொண்டனர். செபாஸ்டியன் கோம்ஸ் பெனா (Sebastian Gomez-Pena) விபத்தொன்றில் சிக்கியதில் அவரது கழுத்து பகுதியில் இருந்து கீழ் பகுதி உடல் […]

திடீரென குறைந்த தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததால், நாட்டில் தங்கத்தின் விலை 20,000 குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (30) காலை கொழும்பு தங்க சந்தை நிலவரங்களின்படி, “22 காரட்” தங்கத்தின் விலை 368,000 ரூபாயாகக் குறைந்துள்ளது. நேற்று (29) 386,400 ரூபாயாக பதிவாகியிருந்தது. இதற்கிடையில், நேற்று 420,000 ஆக இருந்த “24 காரட்” தங்கத்தின் விலை இன்று 400,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.