யாழ்: இரட்டை சகோதரிகள் தமக்கு தாமே தீ .யிட்டு தற். கொ. லை

வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்து இரட்டை சகோதரிகள் தமக்கு தாமே தீ. யிட்டு தற்கொ. லை.. யாழ் புன்னாலைக்கட்டுவானில் பதற வைக்கும் சம்பவம்..ஒரே குடும்பத்தின் இரு மலர்கள்… ஒரே நேரத்தில் வாடிய சோகம்! யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் வடக்கு, குப்பிளான் பகுதியில்அபர்ணா, அபிநயா எனும் இரட்டைச் சகோதரிகள் அகால மரணமடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அன்பும் பாசமும் நிறைந்த குடும்பத்தில் ஒன்றாக வளர்ந்து, கல்விப் பயணத்திலும் ஒன்றாக பயணித்த இருவரும் இன்று எம்மை […]
ஸ்பானிய தன்னாட்சி நகரமாகும்.

செவுட்டா என்பது ஆப்பிரிக்காவின் வடக்குக் கடற்கரையில், ஜிப்ரால்டர் நீரிணைக்கு அப்பால் ஸ்பெயின் பெருநிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு ஸ்பானிய தன்னாட்சி நகரமாகும். 1415-ல் போர்ச்சுகலால் கைப்பற்றப்பட்டு, 1668 முதல் ஸ்பானிய இறையாண்மையின் கீழ் உள்ள இது, ஆப்பிரிக்கப் பெருநிலப்பரப்பில் உள்ள இரண்டு ஸ்பானியப் பிரதேசங்களில் ஒன்றாகும். மேலும், இது ஆப்பிரிக்காவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே தரை எல்லைகளில் ஒன்றாகவும் அமைகிறது. அதன் இருப்பிடத்தின் காரணமாக, செவுட்டா நீண்ட காலமாக ஐரோப்பாவிற்குள் குடியேறுவதற்கான ஒரு முக்கிய மையமாகவும், இப்பகுதிக்கு உரிமை […]
சுமந்திரன், சிவஞானத்தை பதவி விலகக் கோரும் தொகுதிக் கிளை.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை உடனடியாக பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்து காங்கேசன்துறைத் தொகுதிக் கிளை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அக் கடிதத்தில் தமிழரசுக் கட்சியின் விதிமுறைகளை மீறிய பல செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவையாவன, 2025 மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வலி. வடக்கு பிரதேச சபைக்கு வேட்பு மனு சமர்ப்பித்தலில் முறைகேடுகள். 2025 […]
புதிய வசதி: செல்போன் எண் சொல்லாமலே வாட்ஸ்அப்பில் உரையாடலாம்!

வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது செல்போன் எண்ணை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமலேயே அவர்களுடன் உரையாடும் (Chat) வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. அடுத்த சில மாதங்களில் இந்தத் தளத்தின் முந்நூறு கோடி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் உலகளாவிய ரீதியில் இது பயன்பாட்டிற்குத் தரப்படும் என்று அந்தத் தளம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை முதல் பயனர்கள் செயலி மூலம் ஒரு பெயரை முன்கூட்டியே பதிவு செய்யத் தொடங்க முடியும், இருப்பினும் இது கட்டாயமில்லை. பயனர்கள் தங்களது பயனர் பெயர்களை எப்போது வேண்டுமானாலும் நீக்கவோ அல்லது மாற்றவோ […]
ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய கப்பல் மீது தாக்குதலுக்கு!

ஹோமுஸ் நீரிணை ஊடாகப் பயணித்துக் கொண்டிருந்த பிரித்தானியாவுக்குச் சொந்தமான எரிபொருள் போக்குவரத்து கப்பல் ஒன்றுக்கு இன்று (27) அடையாளம் தெரியாத தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலினால் கப்பலுக்குச் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அதில் இருந்த பணியாளர்கள் அனைவரும் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக உள்ளதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் அறிவித்துள்ளது. இதற்கு சில நாட்களுக்கு முன்னரும், ஹோமுஸ் நீரிணை ஊடாகப் பயணித்த சிங்கப்பூருக்குச் சொந்தமான எரிபொருள் கப்பல் ஒன்றின் […]
வரி செலுத்துநர் அடையாள இலக்கம் தொடர்பில் விசேட தகவல்.!

வரி செலுத்துநர் அடையாள இலக்கமானது ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாகப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், பொதுமக்கள் தேவையற்ற பீதியடையத் தேவையில்லை என யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்திற்கு முன்னால் பொதுமக்கள் தினமும் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானித்த அரசாங்க அதிபர், இது குறித்துப் பிராந்திய ஆணையாளருடன் அவசரமாகக் கலந்துரையாடிப் […]
நாட்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு; ஜனாதிபதி அதிர்ச்சி தகவல்

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, மோசடி நிதி பரிவர்த்தனைகள் காரணமாக இலங்கை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அவரின் கூற்றுப்படி, ரூ.300 பில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத பணம், இறக்குமதிகளுக்கான Telegraphic Transfers (TT) மற்றும் Advance Payments மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசடி பரிவர்த்தனைகளில் சில வங்கிகளின் கிளைகள் தொடர்புடையதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு வங்கிக் கிளை […]