புதிய வசதி: செல்போன் எண் சொல்லாமலே வாட்ஸ்அப்பில் உரையாடலாம்!

வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது செல்போன் எண்ணை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமலேயே அவர்களுடன் உரையாடும் (Chat) வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. அடுத்த சில மாதங்களில் இந்தத் தளத்தின் முந்நூறு கோடி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் உலகளாவிய ரீதியில் இது பயன்பாட்டிற்குத் தரப்படும் என்று அந்தத் தளம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை முதல் பயனர்கள் செயலி மூலம் ஒரு பெயரை முன்கூட்டியே பதிவு செய்யத் தொடங்க முடியும், இருப்பினும் இது கட்டாயமில்லை. பயனர்கள் தங்களது பயனர் பெயர்களை எப்போது வேண்டுமானாலும் நீக்கவோ அல்லது மாற்றவோ […]
ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய கப்பல் மீது தாக்குதலுக்கு!

ஹோமுஸ் நீரிணை ஊடாகப் பயணித்துக் கொண்டிருந்த பிரித்தானியாவுக்குச் சொந்தமான எரிபொருள் போக்குவரத்து கப்பல் ஒன்றுக்கு இன்று (27) அடையாளம் தெரியாத தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலினால் கப்பலுக்குச் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அதில் இருந்த பணியாளர்கள் அனைவரும் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக உள்ளதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் அறிவித்துள்ளது. இதற்கு சில நாட்களுக்கு முன்னரும், ஹோமுஸ் நீரிணை ஊடாகப் பயணித்த சிங்கப்பூருக்குச் சொந்தமான எரிபொருள் கப்பல் ஒன்றின் […]
வரி செலுத்துநர் அடையாள இலக்கம் தொடர்பில் விசேட தகவல்.!

வரி செலுத்துநர் அடையாள இலக்கமானது ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாகப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், பொதுமக்கள் தேவையற்ற பீதியடையத் தேவையில்லை என யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்திற்கு முன்னால் பொதுமக்கள் தினமும் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானித்த அரசாங்க அதிபர், இது குறித்துப் பிராந்திய ஆணையாளருடன் அவசரமாகக் கலந்துரையாடிப் […]
நாட்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு; ஜனாதிபதி அதிர்ச்சி தகவல்

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, மோசடி நிதி பரிவர்த்தனைகள் காரணமாக இலங்கை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அவரின் கூற்றுப்படி, ரூ.300 பில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத பணம், இறக்குமதிகளுக்கான Telegraphic Transfers (TT) மற்றும் Advance Payments மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசடி பரிவர்த்தனைகளில் சில வங்கிகளின் கிளைகள் தொடர்புடையதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு வங்கிக் கிளை […]
தமிழரசுக்கட்சி கடிதம்: புதிய பெயர், தேர்தல் கட்சியாக பதிவு, பொதுச்சின்னம் …

இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டிணைவதற்காக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முன்வைத்திருந்த ஆறு நிபந்தனைகளில் இணைந்த கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையாக, சுருக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தப்படுதல் உட்பட மூன்று நிபந்தனை முதற்கட்டமாக ஏற்றுச்செயற்படுவதற்கு தயார் என்று தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் நா.இரத்தினலிங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் ‘தங்களது 12-05-2026 ஆம் திகதிய கடிதத்துடன் இணைத்து அனுப்பப்பட்ட […]
கீவ் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்: உலகப் பாரம்பரியச் சின்னமான ‘கீவ் பெச்செர்ஸ்க் லாவ்ரா’ மடாலயம் தீப்பற்றியது

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களில் இல்லாதளவுக்கு மிகக் கொடூரமான வான்வழித் தாக்குதலை இன்று (15) திங்கட்கிழமை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் உக்ரைனின் ஆன்மீக மற்றும் கலாச்சார வரலாற்றின் அடையாளமாகவும், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் விளங்கும் புகழ்பெற்ற ‘கீவ் பெச்செர்ஸ்க் லாவ்ரா’ குகை மடாலயம் நேரடியாகத் தாக்கப்பட்டு பலத்த சேதமடைந்துள்ளதுடன், பெரும் தீப்பிழம்புகளால் சூழப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றையதினம் அதிகாலை நடத்தப்பட்ட இந்த ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான […]
யாழில் கார்கில்ஸ் food city, உப்புச்சப்பான விசயம்…

கோப்பாயில் அமைந்துள்ள கார்கில்ஸ் food city யில் தரமற்ற உப்பு விற்பனை செய்த காரணத்தால் இருவரிற்கு தண்டத்துடன் ஒன்றரை வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பகுதி பொது சுகாதார பரிசோதகர் எ. ஜோ. எர்ஷன் றோய் அவர்களால் கோப்பாய் சந்தியில் இயங்கும் கார்கில்ஸ் food cityயில் 18.02.2026ம் திகதி உப்பு மாதிரிகள் பெறப்பட்டன. பெறப்பட்ட உப்பு மாதிரிகளின் தரம் தொடர்பில் பகுப்பாய்வு செய்வதற்காக அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் அனுப்பி வைக்கப்பட்ட உப்பானது தரமற்றது […]