கிளிநொச்சி விவசாயிகளுக்கான யூரியா உரம் விநியோகிக்க நடவடிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான ஒரு தொகுதி யூரியா உரம் உடனடியாக விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கம நல அபிவிருத்தி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யூரியா உரம் இத்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் ஆரம்பத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 200 மெற்றிக் தொன் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட அரச அதிபரின் முயற்சியின் பயனாக 222 .65 மெற்றிக் தொன் யூரியா கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீழான விவசாயிகளுக்குரிய யூரியா உரம் அந்த பிரதேச கம நல சேவை நிலையத்தின் களஞ்சிய சாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்