இலங்கைக்கு 770 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடு கிடைத்துள்ளது

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 770 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடு கிடைத்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.

அதில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நேரடி முதலீடு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் சஞ்சய மொஹோட்டலா

இதேவேளை, 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களுக்கு இலங்கை முதலீட்டு சபை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வருடம் நிறைவடையும்போது 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அறிவித்துள்ளார்.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com