19ஆவது திருத்த சட்டத்தை சில திருத்தங்களுடன் மீள அமுலாக்குவது தற்போதைய நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக அமையுமென தாம் நம்புவதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று (19) தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் நாடாளுமன்றம் இன்று முதன்முறையாக கூடியது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
தற்போதைய நிலையை வெற்றி கொள்வதற்கு பொருளாதார முகாமைத்துவம் அவசியமாகும்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட வெவ்வேறு சர்வதேச தரப்புகளுடனும் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கு நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக ஸ்த்திரநிலை அவசியமாகும்.
இதற்காக விரைவானதும், நடைமுறை சாத்தியமானதுமான அரசியலமைப்பு திருத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என தாம் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட்டு வரும் தமது கட்சியின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனியாக எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றில் தெரிவித்தார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





