லசந்த கொலையின் துப்பாக்கிதாரி கைது!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையில் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே பொலிஸாரிடம் தகவல்களை வெளிப்படுத்தும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.

இந்தக் காட்சிகளின்படி, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவு டுபாயிலிருந்து வழங்கப்பட்டதாக சந்தேக நபர் குறிப்பிடுகின்றார்.

வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின் பேரில் தான் செயல்படுவதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறப்பு பொலிஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து சந்தேக நபர் மஹரகமவில் கைது செய்யப்பட்டார்.

தாக்குதலில் தொடர்புடைய முழு நோக்கத்தையும் கண்டறியவும், மேலும் யாராவது தொடர்புடையவர்களா என்பதை அடையாளம் காணவும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்