கப்பலில் இருந்து டீசல் தரையிறக்கம்

மற்றுமொரு டீசல் கப்பலுக்கான கொடுப்பனவு நேற்று (02) செலுத்தப்பட்டது. அதற்கமைய, குறித்த டீசல் தொகை இன்று தரையிறக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு வருட உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், எதிர்வரும் 12 -14 ஆம் திகதிகளில் முதலாவது தொகை கிடக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பெற்றோல் கொள்கலன் மற்றும் ஒரு டீசல் கொள்கலன் ஆகியவற்றிற்கு பகுதியளவு முற்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்