இரத்மலானை விமான நிலையத்தினூடாக இன்று முதல் சர்வதேச விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாலைத்தீவிலிருந்து வந்த விமானமொன்று தரையிறங்கியதை தொடர்ந்து இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக 54 வருடங்களின் பின்னர் மீளவும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிகழ்வு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

இதேவேளை, இரத்மலானை விமான நிலையத்தின் திறன் மற்றும் ஓடுபாதை செயற்திறன் என்பன சுமார் 75 சதவீதம் அதிகரிக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விமான நிலையத்தில் புதிய விமானக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் என்பவற்றை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





