24 மணி நேரமும் மின்சாரம் வழங்க நடவடிக்கை!

நாட்டில் வைத்தியசாலைகள், பாதுகாப்பு இடங்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் போன்ற 24 மணி நேரமும் மின்சாரம் அவசியமான இடங்களுக்கு தடையின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்காக தொடர்ச்சியாக இயங்கக்கூடிய விசேட செயற்பாட்டு மையத்தை நிறுவுமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் அவசரமாக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் திட்டமிடுவதாக இலங்கை மின்சார சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அவசர மின்சார கொள்வனவுக்கான உடன்படிக்கையைக் கைச்சாத்திட அரசாங்கம் தற்போது தயாராகி வருகின்றது என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால், எரிபொருளை நிரப்புவதற்காக, நேற்றிரவும் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, தங்களது போக்குவரத்து சேவைகளுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பாடசாலை மாணவர்களை போக்குவரத்தில் ஈடுபடுத்துபவர்கள் தெரிவிக்கின்றனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்