திகதிகள் உள்ளிட்ட சகல விபரங்கள் இல்லாத பொருட்களை விற்பனை செய்யத் தடை

விபரங்கள் இல்லாத பொருட்களை விற்பனை செய்யவோ, களஞ்சியப்படுத்தி வைக்கவோ வேண்டாம் என வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு பணிப்புரை விடுக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதிகபட்ச சில்லறை விலை, எடை, அளவு, உற்பத்தி திகதி, காலவதியாகும் திகதி, உற்பத்தியாளரின் பெயர், முகவரி உட்பட சகல விபரங்களும் இல்லாத பொருட்களை விற்பனை செய்யவோ, களஞ்சியப்படுத்தி வைக்கவோ வேண்டாம் என வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு பணிப்புரை விடுக்கும் வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இதேவேளை, இணையத்தளம் மூலம் விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com


🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்