இலங்கையின் 4.9 மில்லியன் மக்களுக்கு உணவு தேவை -ஐ.நா

இலங்கையின் சனத்தொகையில் 22% அல்லது 4.9 மில்லியன் மக்களுக்கு உணவு உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய உணவு நெருக்கடிக்கு பல காரணிகள் பங்களித்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனி சீகர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியானது இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2021-22 மஹா பருவங்களில் நெல் அறுவடை ஐம்பது சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

10 வீத மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க திட்டம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கையிலுள்ள ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கிடையில் விசேட சந்திப்பொன்று நேற்று நடை நடைபெற்றது.

இதன்போது சர்வதேச நாணய நிதிய உறுப்பினர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் பணியாளர்கள் மட்டத்திலான உடன்பாடு எட்டப்படும் என தான் நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக உணவுப் பாதுகாப்புத் திட்டமொன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 3 வேளை உணவை பெற்றுக்கொள்ள முடியாத 10% மக்களுக்கு அரசாங்கம் இலவசமாக உணவை வழங்க முடியும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் ஜப்பானின் நம்பிக்கையை மீட்பதற்கும் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் ஜப்பானுடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் உணவு மற்றும் மருத்துவப் பொருட்களில் உதவி செய்வதில் நாடுகள் முன்னேறி வருவதாகவும், எனினும், எந்த நாடும் எரிபொருளை இலவசமாக வழங்க முன்வராது எனவும் பிரதமர் தெரிவித்தார்.


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்