அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு

28 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கல், நாளை முதல் ஆரம்பிக்கப்படுவதாக விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போதுவரையில் மூவாயிரத்து 500 ரூபாவைப் பெற்ற சமுர்த்தி பயனாளர் குடும்பம் ஒன்றுக்கு, நான்காயிரத்து 500 ரூபா கொடுப்பனவு கிடைக்கப்பெறும்.

2,500 ரூபா கொடுப்பனவைப் பெற்ற குடும்பத்துக்கு, 3,200 ரூபா கொடுப்பனவும், 2, 500 ரூபா கொடுப்பனவைப் பெற்ற குடும்பத்துக்கு, ஆயிரத்து 900 ரூபா கொடுப்பனவும் கிடைக்கும்.

இதற்கமைய, எந்தவொரு சமுர்த்தி பயனாளியும், சமுர்த்தி வங்கி மூலம், நாளைமுதல் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com