இலங்கையில் முதன்முறையாக கொலன்னாவையில் உள்ள அரச தொழிற்சாலை ஊடாக வாகன இலக்கத் தகடுகளை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக வாகன இலக்கத் தகடுகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதன் மூலம், ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பெரும் தொகையான பணத்தை சேமிப்பதே இதன் மற்றுமொரு நோக்கமாகும்.
உள்ளூர் தனியார் நிறுவனம் மூலம் தற்போது நடைமுறைப்படுத்தப்படும், உள்ள வாகன இலக்கத் தகடுகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் 2024 ஆம் ஆண்டு காலாவதியாகவுள்ளதுடன், அதன் பின்னர் அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தினால் இந்த இலக்கத்தகடுகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளன.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு வருடமும் சுமார் 500,000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அத்துடன் வருடாந்தம் குறைந்தது 10 இலட்சம் இலக்கத் தகடுகள் வெளிநாடுகளிலிருந்து பெறப்படுகின்றன.
இந்நிலையில், சுமார் 600 மில்லியன் ரூபாவினை வெளிநாட்டுக்கு செல்லவிடாமல் சேமிக்க முடியும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com