நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி சாரதிகள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அந்த சங்கத்தின் இணைச் செயலாளர் டீ.பி.சாந்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் கட்டணம் அதிகரிப்புக்கு ஏற்றவகையில் தாங்கி ஊர்திக்கான கட்டணத்திலும் திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என அந்த சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் நேற்று தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்ட வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கடமைக்கு திரும்பாக எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கான அனுமதியை இரத்து செய்யுமாறு இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எரிபொருளை கொண்டு செல்வதற்காக புதிய விநியோகஸ்தர்களுக்கான அனுமதியை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்