நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 41,000 மெட்ரிக் டன் டீசல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டு வருவதாக எரிபொருள் தொகை களஞ்சியசாலையின் தலைவர் நாலக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒக்டேன் 92 ரக மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விநியோகமும் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளொன்றில் 5,000 மெட்ரிக் டன் டீசலும், 4,000 மெட்ரிக் டன் பெற்றோலும் நாட்டிற்கு அவசியமாகும்.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, டீசல் இன்மை காரணமாக நேற்றைய தினம் 20 சதவீத தனியார் பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுன விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் தங்களுக்கு சலுகை அடிப்படையில் எரிபொருளை வழங்க அரசாங்கம் பொறிமுறையொன்றை தயாரிக்க வேண்டும்.
இதற்கு மேலும் பேருந்து கட்டணங்களை உயர்த்தி பொதுமக்களை அசௌகரியத்திற்குள்ளாக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com