இலங்கை சீனியில் இரசாயன கலப்படம்.

வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட சீனி பக்கற்றில் ஒரு வகையான இரசாயன பொருள் கலப்படம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமகனொருவர் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிலும் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா பஜார் வீதியில் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் பொதுமகனொருவர், அவ் வர்த்தக நிலையத்தினால் பொதியிடப்பட்ட சீனி பக்கற்றினை கொள்வனவு செய்துள்ளார்.

வீட்டிற்கு சீனியினை எடுத்துச்சென்று அதனை பாவனைக்கு உட்படுத்திய சமயத்தில் அதனுள் ஓர் விதமான இராசயான பொருள் கலந்துள்ளதனை அவதானித்துள்ளார். இதனையடுத்து வவுனியா மாவட்ட பாவனையாளர் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிலும் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது, குறித்த வர்த்தக நிலையம் தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கினங்க நாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் குறித்த வர்த்தக நிலையத்தினை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய சமயத்தில், சீனி பொதியிடும் சமயத்தில் குளிர்பானம் தயார் செய்ய பயன்படுத்தப்படு்ம் சிற்றிக் அசிட் எனப்படுவது தவறுதளாக சீனியில் கலந்துள்ளது.

தவறுக்கு வருந்துவதுடன் குறித்த சீனியினை பெற்றுக்கொண்டவர்கள் உடனடியாக எம்மிடம் அதனை மீள வழங்குமாறும் தெரிவித்தனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்