தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
சக்தி மற்றும் மின்சக்தி அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் தீவிர கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், காலதாமதமின்றி எரிபொருளைப் பெறுதல், தொடர்ந்து எரிபொருளை வழங்குதல், மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை வழங்குதல் ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
2022 மார்ச் 5 முதல் மின் விநியோகம் தடைபடாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாளை (03) முதல் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.
பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளை சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் பீதி அடைய வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com