இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி!

இலங்கையின் தேயிலை ஏற்றுமதியானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, 19.38 மில்லியன் கிலோகிராம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை அதிகளவில் ரஷ்யா மற்றும் ஈராக்கினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், சீனாவிற்கு கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை தொகையினை காட்டிலும் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 7 இலட்சத்து 38 ஆயிரம் கிலோகிராம் ஏற்றுமதி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தேயிலை உற்பத்தியானது கடந்த ஜனவரி மாதத்தில் 22.82 மில்லியன் கிலோகிராம் வீழ்ச்சியடைந்துள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச சந்தையில் ஒருகிலோகிராம் தேயிலையின் விலை 3 ரூபா 50 சதம் அமெரிக்க டொலராக கடந்த ஜனவரி மாதத்தில் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்