இலங்கைக்கு மீண்டும் உதவும் சீனா: 2.5 பில்லியன் டொலர்கள்

பொருளாதார நெருக்கடியால் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இலங்கைக்கு, சீனா 2.5 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சீனாவின் அதிகாரிகள் இதற்கான உறுதியை அளித்துள்ளதாக சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹொன தெரிவித்தார்.

இதன்படி இலங்கை பெய்ஜிங்கில் இருந்து 1 பில்லியன் டொலர் கடனைப் பெற உள்ளது, இதன் மூலம் ஜூலையில் நிலுவையில் உள்ள சீனக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியும்,

அத்துடன் ஆடை ஏற்றுமதித் தொழிலுக்குத் தேவையான பொருட்களை 1.5 பில்லியன் டொலர் கடன் வரியில் கொள்வனவு செய்யமுடியும் என்று கோஹன குறிப்பிட்டுள்ளார்

தற்போதைய சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, எதையாவது விரைவாகச் செய்யக்கூடிய நாடுகளில் சீனாவும் ஒன்றாகும் என்று கோஹன தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் இருந்து கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அண்மையில்; சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்,

இதேவேளை இலங்கை அதிகாரிகள் இந்த வாரத்தின் பிற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளை சந்தித்து, இலங்கை இந்த ஆண்டு செலுத்த வேண்டிய 8.6 பில்லியன் டொலர் மதிப்புள்ள கடனைச் செலுத்துவதற்கு உதவும் சாத்தியமான வழிகளை சரிசெய்வார்கள் என்றும் கோஹன குறிப்பிட்டுள்ளார்

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்