அத்தியாவசியமான பொருட்கள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து இலங்கை மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடன் எல்லை வசதியை (Credit Line) கோரியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்த போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக இரண்டு முக்கிய தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாக்கப்பட்டுள்ளது.
2020 ஜனவரியில் இருந்து இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 70% குறைந்துள்ளது.
இதனால் அத்தியாவசிய உணவு மற்றும் எரிபொருள் இறக்குமதிக்குகட்டணம் செலுத்துவதில் இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்கொண்டதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை உலக நாடுகளின் உதவியை நாடிவருகிறது.
இதேவேளை, முன்னதாக இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் ஒரு பில்லியன் டொலர் குறுகிய கால சலுகைக் கடனுக்கான ஒப்பந்தம் கடந்த 17 ஆம்திகதி புது டெல்லியில் கைச்சாத்திடப்பட்டது.
இந்திய அரச வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் பிரதி பொது முகாமையாளர் ஷிரி புஷ்கார் மற்றும் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
உணவு, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்த ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, இலங்கை மேலும் ஒரு பில்லியன் டொலரை இந்தியாவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com