அரிசியை இறக்குமதி செய்து சலுகை விலையில் வழங்க நடவடிக்கை

இந்தியாவிலிருந்து மேலதிக கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் முதல் இருப்பு அடுத்த வாரம் வரும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நாடு, சம்பா மற்றும் வெள்ளைப் பச்சை அரிசி உள்ளிட்ட 40,000 மெட்ரிக்தொன் அரிசி சலுகை விலையில் விநியோகிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் புத்தாண்டுக் காலத்தில் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வியாபாரிகள் பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலையை செயற்கையாக உயர்த்தி சந்தையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவார்கள் என நம்புவதாகவும், சலுகை அரிசி விநியோகத்தின் மூலம் இந்த நிலைமையை எதிர்த்துப் போராட முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் முறையான முறையில் அரிசியை இறக்குமதி செய்து விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்