அத்தியாவசியத்துக்கு எரிபொருளை வழங்கத் தீர்மானம்

எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்படாவிட்டால் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க தீர்மானம் எடுக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தயாராகி வருகிறது.

மின் உற்பத்தி நிலையங்கள், புகையிரதங்கள், பயணிகள் பேருந்துகள், முப்படைகள், பொலிஸ் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்படும் என அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது கூட்டுத்தாபனத்தின் நாளாந்த இழப்பு ரூபா 365 கோடிக்கும் அதிகமாகும். எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலர்களை செலுத்துவதற்கு ஒரு ரூபாவைக் கூட கூட்டுத்தாபனத்தால் சேகரிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகும். இல்லையெனில் இந்த மாதத்தில் ஏற்படும் நஷ்டம் அதிகரித்து, நிறுவனம் கடும் நிதிச் சரிவை சந்திக்க நேரிடும் என்றார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்