கொழும்பில் சிறுமியை தகாத உறவுக்குள் தள்ளிய ஆசிரியை!

கொழும்பில் பதினேழு வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட ஆசிரியை மற்றும் அவரது கணவருக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம் 45 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது.

அதோடு தண்டனைகளுடன் கூடுதலாக, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் ரூ.500,000 அபராதமும் விதித்தது. நீண்ட விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை பதினேழு வயது சிறுமியை தொலைதூரப் பகுதியிலிருந்து கொழும்புக்கு அழைத்து வந்து கணவர் மூலம் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த்து.

மேலும் , குற்றம் சாட்டப்பட்டவர் அவருக்கு உதவி செய்து உடந்தையாக இருந்ததாகவும் விசாரணையின் போது தெரியவந்தது. ஆதாரங்களை பரிசீலித்த பிறகு, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க தீர்ப்பளித்தார்.

சிறப்புச் செய்திகள்