எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் இலகுவாக கனடா செல்ல புதிய மாற்றம்!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளை பெரும் முறையை கனடா இலகுவாக்க உள்ளது. இதற்கமைய, முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு இனி மாகாண அல்லது பிராந்திய சான்றளிப்பு கடிதம் தேவையில்லை. இந்த மாற்றம் செயன்முறையை விரைவுபடுத்துவதோடு காகித வேலைகளையும் குறைக்கின்றது. இதன்படி, முனைவர் பட்ட மாணவர்கள், தங்கள் பல்கலைக்கழக ஏற்பு கடிதம் மற்றும் உயிரியளவியல் (biometrics) சோதனை ஆகியவற்றை சரிபார்த்த பிறகும் இரண்டு வார விரைவான செயலாக்கத்திலிருந்து பயனடையலாம். புதிய அமைப்பில் […]

கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு!

கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கனடியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மாதாந்த செலவுகள் தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் நானோஸ் ஆய்வு நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. கனடியர்களில் ஐந்தில் ஒருவர் (20%) கடந்த ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ஒரு கட்டணத்தை செலுத்தாமல் தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆய்வில், 55 வயதுக்கு குறைவானவர்கள், உணவுக்காக சிற்றூந்து கடன், கடன் அட்டை அல்லது மின்சார கட்டணங்களை நிலுவையில் வைக்கும் […]

கனடாவில் வேலை வாங்கி தருவதாக பெருந்தொகை கொள்ளை!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இடைத்தரகரான தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது, பியகம காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு நபர்களிடமிருந்து 5.5 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளதாக கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, இந்த சந்தேக நபர் பியகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பியகம பகுதியில் உள்ள ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் இடைத்தரகராக இருந்து இந்தப் பண மோசடியைச் […]

இலங்கையர் கனடாவில் செய்த நெகிழ்ச்சி செயல், உலகிலேயே முதல் முறை என அங்கீகாரம்!

கனடாவின் – ஒட்டாவா நகரானது, வெளிநாடுகளில் உள்ள புத்த கோவில்களுக்கு இலங்கையர் ஒருவரின் தலைமையில் சாலை அடையாளங்களை நிறுவும் உலகின் முதல் நகரமாக மாறியுள்ளது. ஒட்டாவா நகரத்தின் பொதுப்பணி மற்றும் சேவைகள் துறை, போக்குவரத்து செயல்பாட்டுப் பிரிவுடன் இணைந்து, நகரத்தில் உள்ள புத்த கோவில்களை அடையாளம் காண ஒரு சாலை அடையாள அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. “இதுவரை, 14 அடையாளங்கள் நிறுவப்பட்டுள்ளன. இலங்கை கோயில்கள் மட்டுமல்ல, கம்போடிய, வியட்நாமிய மற்றும் தாய் சமூகங்களைச் சேர்ந்த கோயில்களும் குறிக்கப்பட்டுள்ளன” என்று […]

கனடாவில் வீடுகளின் விற்பனையில் வலுவான உயர்வு!

கனடாவில் வீட்டு விற்பனையில் வலுவான உயர்வு பதிவாகியுள்ளது. கனடிய வீட்டு மனை ஒன்றியம் 2025 ஓகஸ்ட் மாதத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீட்டு விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம் நாடு முழுவதும் 40,257 வீடுகள் விற்பனையாகியுள்ளன, இது 2024 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வந்த 39,522 வீடுகளைவிட 1.9% அதிகம் எனக் கூறப்படுகின்றது. அத்துடன் மாதந்தோறும் வீட்டு விற்பனை 1.1% உயர்ந்து வருகிறது. மார்ச் மாதத்திலிருந்து மொத்தமாக 12.5% உயர்வு பதிவாகி, தொடர்ந்து […]

கனடாவில் ஆபத்தான நபராக போலீசாரால் தேடப்பட்டு வரும் தமிழ் இளைஞன்!

கனடாவில் (Canada) ஆபத்தான நபராக பெயரிடப்பட்டுள்ள தமிழ் இளைஞன் ஒருவர் தேடப்பட்டு வருவதாக பீல் (Peel) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ரொரன்ரோவை சேர்ந்த 36 வயதான பிரதீபன் நாகராஜா என்பவரே தேடப்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபர் மீது , இரண்டு கொலை முயற்சி, துப்பாக்கி சூடு மேற்கொண்டமை மற்றும் அங்கீகரிக்கப்படாத துப்பாக்கியை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பிரதீபன் நாகராஜாவுடன் தொடர்பு கொண்டிருந்த எவரும் அல்லது அவர் இருக்கும் இடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையினருக்கு […]

கனடாவில் வேலை வாய்ப்புக்கள் இழப்பு குறித்து வெளியான தகவல்!

கனடாவில் (Canada) கடந்த ஜூலை மாதத்தில் சுமார் 41,000 வேலை வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. தனியார் துறைகளில் இளைஞர்கள் அதிகளவில் இந்த தொழில் வாய்ப்பு இழப்புக்களை எதிர்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்புக்களை தேடுவோரின் எண்ணிக்கை ஜூன் மாதத்திலிருந்து சுமார் மாறாத நிலையில் காணப்பட்டதனால் வேலையின்மை விகிதம் 6.9 சதவீதமாக காணப்பட்டது. கடந்த மாதத்தில் 51,000 முழுநேர வேலை வாய்ப்புக்கள் இழக்கப்பட்டதாகவும் மேலும் இந்த இழப்புகளின் பெரும்பகுதி தனியார் துறையில் […]