நாடாளுமன்ற உறுப்பினர செல்வம் அடைக்கலநாதன் குறித்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளது,வெளியான அதிர்ச்சித் தகவல்!

நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மீது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் குறித்த ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.

லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள சட்டத்துறை முறையாக செயற்பட்டிருந்தால் இதை நான் கையில் எடுத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

இன்றுவரை எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களோ ஏன் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ இது தொடர்பில் எந்தவொரு கருத்தும் வெளியிடவில்லை.

ராஜபக்சர்களை எதிர்த்து கேள்வி எழுப்புகின்றவர்கள் ஏன் இந்த விடயத்தில் மௌனமாக உள்ளனர் எனவும் வினவியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்